சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
54   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 40 )  

கொலை மதகரி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனதன தனதன தன
     தந்தத் ...... தனதானா


கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
     கும்பத் ...... தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
     கொண்டுற் ...... றிடுநாயேன்
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
     நின்றுற் ...... றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
     நின்பற் ...... றடைவேனோ
சிலையென வடமலை யுடையவர் அருளிய
     செஞ்சொற் ...... சிறுபாலா
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
     செந்திற் ...... பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
     ரும்பிப் ...... புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
     டங்கப் ...... பெருமாளே.

கொலை மத கரி அ(ன்)ன ம்ருமகத தன கிரி கும்பத் தன
மானார்
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு
நாயேன்
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று
உற்றிடவே தான்
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று
அடைவேனோ
சிலை என வட மலை உடையவர் அருளிய செம் சொல்
சிறு பாலா
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில்
பதி வேலா
வி(ல்)லை நிகர் நுதல் இப மயில் குற மகளும் விரும்பிப்
புணர்வோனே
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்கப்
பெருமாளே.
கொலை செய்யும் மத யானைக்கு ஒப்பானதும், கஸ்தூரி அணிந்ததும், குடம் போன்றதும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்களின் குமுத மலர் போன்றதும், அமுதம் தருவதுமான வாயிதழ் ஊறலைப் பருகி, மனம் உருகி மோக மயக்கம் கொண்டுள்ள நாயேனுடைய நல்ல நிலையை அழிக்கின்ற கவலைகள் எல்லாம் நீங்குமாறு, உனது அருட் பார்வையில் நின்று நிலை பெறுவதற்கு, உன்னுடைய இரண்டு திருவடி மலர் இணைகளை மனத்தில் இருக்கச் செய்ய உன் மீது பற்றைப் பெறுவேனோ? வில்லாக வடக்கில் உள்ள மேரு மலையைக் கொண்டவராகிய சிவபெருமான் பெற்ற, செவ்விய சொற்களை உடைய, சிறு குழந்தையே, அலை கடலின் நடுவே நின்ற சூரனை வதைத்த திருச்செந்தூர் நகர் வேலவனே, வில்லுக்கு நிகரான நெற்றியை உடைய, (ஐராவதம் என்ற) யானை போற்றி வளர்த்த மயில் போன்ற தேவயானையையும், குறப் பெண்ணாகிய வள்ளியையும் விரும்பி மணம் புரிந்தவனே, வெற்றிச் சின்னம் அணிந்த பச்சை மயிலில் ஏறி வரும் குமரனே, சுயம்பு மூர்த்தியாக வந்த பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கொலை மத கரி அ(ன்)ன ம்ருமகத தன கிரி கும்பத் தன
மானார்
... கொலை செய்யும் மத யானைக்கு ஒப்பானதும், கஸ்தூரி
அணிந்ததும், குடம் போன்றதும் ஆகிய மார்பகங்களை உடைய
விலைமாதர்களின்
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு
நாயேன்
... குமுத மலர் போன்றதும், அமுதம் தருவதுமான
வாயிதழ் ஊறலைப் பருகி, மனம் உருகி மோக மயக்கம்
கொண்டுள்ள நாயேனுடைய
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று
உற்றிடவே தான்
... நல்ல நிலையை அழிக்கின்ற கவலைகள்
எல்லாம் நீங்குமாறு, உனது அருட் பார்வையில் நின்று நிலை
பெறுவதற்கு,
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று
அடைவேனோ
... உன்னுடைய இரண்டு திருவடி மலர்
இணைகளை மனத்தில் இருக்கச் செய்ய உன் மீது பற்றைப்
பெறுவேனோ?
சிலை என வட மலை உடையவர் அருளிய செம் சொல்
சிறு பாலா
... வில்லாக வடக்கில் உள்ள மேரு மலையைக்
கொண்டவராகிய சிவபெருமான் பெற்ற, செவ்விய சொற்களை
உடைய, சிறு குழந்தையே,
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில்
பதி வேலா
... அலை கடலின் நடுவே நின்ற சூரனை வதைத்த
திருச்செந்தூர் நகர் வேலவனே,
வி(ல்)லை நிகர் நுதல் இப மயில் குற மகளும் விரும்பிப்
புணர்வோனே
... வில்லுக்கு நிகரான நெற்றியை உடைய,
(ஐராவதம் என்ற) யானை போற்றி வளர்த்த மயில் போன்ற
தேவயானையையும், குறப் பெண்ணாகிய வள்ளியையும்
விரும்பி மணம் புரிந்தவனே,
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்கப்
பெருமாளே.
... வெற்றிச் சின்னம் அணிந்த பச்சை மயிலில்
ஏறி வரும் குமரனே, சுயம்பு மூர்த்தியாக வந்த பெருமாளே.
Similar songs:

54 - கொலை மதகரி (திருச்செந்தூர்)

தனதன தனதன தனதன தன
     தந்தத் ...... தனதானா

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 54