சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
61   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 29 - வாரியார் # 98 )  

தண் தேனுண்டே

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான


தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
     தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
     சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
     வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
     வந்தே நின்பொற் ...... கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
     கொன்றாய் வென்றிக் ...... குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
     குன்றா மன்றற் ...... கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
     கண்டா கந்தப் ...... புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
     கந்தா செந்திற் ...... பெருமாளே.

தண் தேனுண்டே
வண்டார் வஞ்சேர்
தண் தார் மஞ்சுக் குழல்மானார் தம்பால்
அன்பார் நெஞ்சே கொண்டே
சம்பாவஞ் சொற்று அடிநாயேன்
மண் தோயம் தீ மென்கால் விண்தோய்
வண்காயம் பொய்க்குடில் வேறாய்
வன்கானம்போய் அண்டா முன்பே
வந்தே நின்பொற்கழல்தாராய்
கொண்டாடும்பேர் கொண்டாடுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் குமரேசா
கொங்கார் வண்டு ஆர் பண்பாடும்
சீர்குன்றா மன்றற்கிரியோனே
கண்டாகும் பாலுண்டாய்
அண்டார் கண்டா கந்தப் புயவேளே
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா
கந்தா செந்திற் பெருமாளே.
குளிர்ந்த தேனைப் பருகி வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற தண்மையான மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில் அன்பு நிறைந்த மனத்தைக் கொண்டு சல்லாபித்து சம்பாஷணைகளைச் செய்கின்ற நாயினும் கீழான அடியேன், மண், நீர், தீ, மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான வளமிக்க இந்த சரீரமாகிய பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி, கொடும் சுடுகாட்டுக்கு அருகில் நெருங்குவதற்கு முன்பாக என்முன் தோன்றி உன் அழகிய திருவடிகளைத் தந்தருள்வாயாக. தன்னைக் கொண்டாடிப் புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை கொன்றவனே, வெற்றியை உடைய குமரேசனே, பூக்களின் மகரந்தங்களில் நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும் சிறப்பு குறையாத வள்ளிமலையில் வாழ்பவனே, கற்கண்டு போன்று இனிக்கும் உமையின் திருமுலைப்பால் உண்டவனே, பகைவர்களைக் கண்டித்தவனே, மணம் கமழும் புயத்தை உடையவனே கம்பம் போன்ற வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா, கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில் வாழும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
தண் தேனுண்டே ... குளிர்ந்த தேனைப் பருகி
வண்டார் வஞ்சேர் ... வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற
தண் தார் மஞ்சுக் குழல்மானார் தம்பால் ... தண்மையான
மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில்
அன்பார் நெஞ்சே கொண்டே ... அன்பு நிறைந்த மனத்தைக்
கொண்டு சல்லாபித்து
சம்பாவஞ் சொற்று அடிநாயேன் ... சம்பாஷணைகளைச் செய்கின்ற
நாயினும் கீழான அடியேன்,
மண் தோயம் தீ மென்கால் விண்தோய் ... மண், நீர், தீ,
மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான
வண்காயம் பொய்க்குடில் வேறாய் ... வளமிக்க இந்த சரீரமாகிய
பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி,
வன்கானம்போய் அண்டா முன்பே ... கொடும் சுடுகாட்டுக்கு
அருகில் நெருங்குவதற்கு முன்பாக
வந்தே நின்பொற்கழல்தாராய் ... என்முன் தோன்றி உன் அழகிய
திருவடிகளைத் தந்தருள்வாயாக.
கொண்டாடும்பேர் கொண்டாடுஞ்சூர் ... தன்னைக் கொண்டாடிப்
புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை
கொன்றாய் வென்றிக் குமரேசா ... கொன்றவனே, வெற்றியை
உடைய குமரேசனே,
கொங்கார் வண்டு ஆர் பண்பாடும் ... பூக்களின் மகரந்தங்களில்
நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும்
சீர்குன்றா மன்றற்கிரியோனே ... சிறப்பு குறையாத வள்ளிமலையில்
வாழ்பவனே,
கண்டாகும் பாலுண்டாய் ... கற்கண்டு போன்று இனிக்கும்
உமையின் திருமுலைப்பால் உண்டவனே,
அண்டார் கண்டா கந்தப் புயவேளே ... பகைவர்களைக் கண்டித்தவனே,
மணம் கமழும் புயத்தை உடையவனே
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா ... கம்பம் போன்ற
வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா,
கந்தா செந்திற் பெருமாளே. ... கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில்
வாழும் பெருமாளே.
Similar songs:

61 - தண் தேனுண்டே (திருச்செந்தூர்)

தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான

102 - வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)

தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 61