சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
754   நிம்பபுரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 287 - வாரியார் # 764 )  

அஞ்சுவித பூதமும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான


அஞ்சுவித பூத முங்கரண நாலு
     மந்திபகல் யாது ...... மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
     அந்தவொரு வீடு ...... பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
     மங்கைதனை நாடி ...... வனமீது
வந்தசர ணார விந்தமது பாட
     வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
     குங்குமப டீர ...... வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
     குன்றுதடு மாற ...... இகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
     வென்றிவடி வேலை ...... விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
     விண்டலம கீபர் ...... பெருமாளே.

அஞ்சுவித பூதமும்
கரண நாலும்
அந்திபகல் யாதும் அறியாத
அந்தநடு ஆதி யொன்றுமிலதான
அந்தவொரு வீடு பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி வனமீது
வந்த சரணார விந்தம் அது பாட
வண்டமிழ் விநோதம் அருள்வாயே
குஞ்சர கலாப வஞ்சி
அபிராம குங்கும படீர அதிரேக
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்று தடுமாற இகல்கோப
வெஞ்சமர சூரன் நெஞ்சு பக
வீரவென்றிவடி வேலை விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டல மகீபர் பெருமாளே.
பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்களும், இரவு - பகல் என்ற இரண்டும் அறியாத முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான அந்த ஒப்பற்ற மோக்ஷ இன்பத்தைப் பெறுமாறு, மேகம் தவழ்கின்ற சிகரங்களை உடைய அழகிய மலைவாழ் வேடர்களின் மகளாகிய வள்ளியை விரும்பி வள்ளிமலைக் காட்டில் வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக. ஐராவதம் என்ற யானை வளர்த்த, மயிலின் சாயலுடைய, மங்கை தேவயானையின் அழகிய செஞ்சாந்தும் சந்தனமும் மிகுதியாகப் பூசியுள்ள மார்பின் மீது மனதாரத் தழுவி அணைக்கும் திருமார்பா, கிரெளஞ்சகிரி தடுமாற்றம் அடையுமாறு அதன்மீது பகைத்துக் கோபித்தவனே, கொடிய போரினைச் செய்த சூரனுடைய நெஞ்சு பிளவுபட வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலினைச் செலுத்தியவனே, ஒளி பொருந்திய மயில்கள் சூழ்ந்துள்ள நிம்பபுரம் என்ற தலத்தவனே, விண்ணுலகத்துத் தேவேந்திரர்களின் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
அஞ்சுவித பூதமும் ... பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற
பஞ்ச பூதங்களும்,
கரண நாலும் ... மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு
கரணங்களும்,
அந்திபகல் யாதும் அறியாத ... இரவு - பகல் என்ற இரண்டும்
அறியாத
அந்தநடு ஆதி யொன்றுமிலதான ... முடிவு, நடு, முதல் ஒன்றும்
இல்லாததான
அந்தவொரு வீடு பெறுமாறு ... அந்த ஒப்பற்ற மோக்ஷ இன்பத்தைப்
பெறுமாறு,
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் ... மேகம் தவழ்கின்ற சிகரங்களை
உடைய அழகிய மலைவாழ் வேடர்களின்
மங்கைதனை நாடி வனமீது ... மகளாகிய வள்ளியை விரும்பி
வள்ளிமலைக் காட்டில்
வந்த சரணார விந்தம் அது பாட ... வந்தடைந்த திருவடித்
தாமரைகளைப் பாட எனக்கு
வண்டமிழ் விநோதம் அருள்வாயே ... வண்தமிழில் அற்புதக்
கவித்துவத்தை நீ அருள்வாயாக.
குஞ்சர கலாப வஞ்சி ... ஐராவதம் என்ற யானை வளர்த்த, மயிலின்
சாயலுடைய, மங்கை தேவயானையின்
அபிராம குங்கும படீர அதிரேக ... அழகிய செஞ்சாந்தும்
சந்தனமும் மிகுதியாகப் பூசியுள்ள
கும்பதன மீது சென்றணையு மார்ப ... மார்பின் மீது மனதாரத்
தழுவி அணைக்கும் திருமார்பா,
குன்று தடுமாற இகல்கோப ... கிரெளஞ்சகிரி தடுமாற்றம்
அடையுமாறு அதன்மீது பகைத்துக் கோபித்தவனே,
வெஞ்சமர சூரன் நெஞ்சு பக ... கொடிய போரினைச் செய்த
சூரனுடைய நெஞ்சு பிளவுபட
வீரவென்றிவடி வேலை விடுவோனே ... வீரம் வாய்ந்த வெற்றி
தரும் கூரிய வேலினைச் செலுத்தியவனே,
விம்பமதில் சூழு நிம்பபுர வாண ... ஒளி பொருந்திய மயில்கள்
சூழ்ந்துள்ள நிம்பபுரம் என்ற தலத்தவனே,
விண்டல மகீபர் பெருமாளே. ... விண்ணுலகத்துத்
தேவேந்திரர்களின் பெருமாளே.
Similar songs:

45 - கன்றிலுறு மானை (திருச்செந்தூர்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

754 - அஞ்சுவித பூதமும் (நிம்பபுரம்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

938 - சந்திதொறும் நாணம் (சிங்கை)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

1334 - கன்றிவரு நீல (திருச்செந்தூர்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

Songs from this thalam நிம்பபுரம்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 754