![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
802 - இறையத்தனையோ (திலதைப்பதி) Songs from this thalam திலதைப்பதி 804 - மகரக் குழைக்குளுந்து
802 திலதைப்பதி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 281 - வாரியார் # 812 )
இறையத்தனையோ
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனனத் தனனா ...... தனதான
இறையத் தனையோ ...... அதுதானும்
இலையிட் டுணலேய் ...... தருகாலம்
அறையிற் பெரிதா ...... மலமாயை
அலையப் படுமா ...... றினியாமோ
மறையத் தனைமா ...... சிறைசாலை
வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர்
சிறையைத் தவிரா ...... விடும்வேலா
திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.
இட்டுணல் ஏய்தருகாலம்
இறையத்தனையோ அதுதானும் இலை
அறையிற் பெரிதாம்
மலமாயை அலையப் படுமாறு இனியாமோ
மறை அத்தனை மா சிறைசாலை வழியுய்த்து
உயர்வானுறு தேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே. மற்ற ஒருவருக்கு உணவு இட்டபின் நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலம் ஓர் அணு எவ்வளவு உள்ளதோ அந்த அளவு கூட என்னிடம் இல்லை. (அந்த நெறி எவ்வளவு இருந்தது என) சொல்வதானால் நான் அந்நெறியை விட்ட காலம்தான் மிகப் பெரியது. மும்மலங்களிலும் மாயையிலும் அலைச்சல் உறுகின்ற இந்தத் தீய நெறி இனிமேல் எனக்குக் கூடாது. வேதம் கற்ற தலைவனாகிய பிரமனை பெரிய சிறைச்சாலைக்குப் போகும்படியாகச் செய்து, உயர்ந்த வானிலுள்ள தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலனே, திலதைப்பதி என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமாளே. Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link இட்டுணல் ஏய்தருகாலம் ... மற்ற ஒருவருக்கு உணவு இட்டபின்
நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலம்
இறையத்தனையோ அதுதானும் இலை ... ஓர் அணு எவ்வளவு
உள்ளதோ அந்த அளவு கூட என்னிடம் இல்லை.
அறையிற் பெரிதாம் ... (அந்த நெறி எவ்வளவு இருந்தது என)
சொல்வதானால் நான் அந்நெறியை விட்ட காலம்தான் மிகப் பெரியது.
மலமாயை அலையப் படுமாறு இனியாமோ ... மும்மலங்களிலும்
மாயையிலும் அலைச்சல் உறுகின்ற இந்தத் தீய நெறி இனிமேல் எனக்குக்
கூடாது.
மறை அத்தனை மா சிறைசாலை வழியுய்த்து ... வேதம் கற்ற
தலைவனாகிய பிரமனை பெரிய சிறைச்சாலைக்குப் போகும்படியாகச்
செய்து,
உயர்வானுறு தேவர் ... உயர்ந்த வானிலுள்ள தேவர்களின்
சிறையைத் தவிரா விடும்வேலா ... சிறையை நீக்கிவிட்ட வேலனே,
திலதைப் பதிவாழ் பெருமாளே. ... திலதைப்பதி என்னும்
திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.
1
Similar songs:
தனனத் தனனா ...... தனதான
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song lang tamil sequence no 802