This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார் சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
பாலோ தேனோ பாகோ வானோர்
பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ
பானோ வான்முத்தென நீளத்
தாலோ தாலேலோ பாடாதே
தாய்மார் நேசத்து உனு சாரந்
தாராதே பேர் ஈயாதே
பேசாதே ஏசத் தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாள்
மால் ஆனாது ஏனற்புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப்புகுவோனே
சேலோடே சேர் ஆரால் சாலார்
சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்பெருமாளே.
நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர் தலத்தின் பெருஞ் செல்வமே, இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, இறைவனே, தேவர்களின் பெருமாளே.
Audio/Video Link(s)
பாலோ தேனோ பாகோ ... நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ?வானோர் பாராவாரத்து அமுதேயோ ... தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ?பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ ... நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ?பானோ வான்முத்தென ... பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம்நீளத் தாலோ தாலேலோ பாடாதே ... விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும்,தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே ... தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும்,பேர் ஈயாதே பேசாதே ... புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும்,ஏசத் தகுமோதான் ... ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ?ஆலோல் கேளா மேலோர் நாள் ... வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில்,மால் ஆனாது ஏனற்புனமேபோய் ... ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று,ஆயாள் தாள்மேல் வீழா வாழா ... அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும்,ஆளா வேளைப்புகுவோனே ... அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே,சேலோடே சேர் ஆரால் சாலார் ... சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ளசீர் ஆரூரிற் பெருவாழ்வே ... சீர்பெற்ற திருவாரூர் தலத்தின் பெருஞ் செல்வமே,சேயே வேளே பூவே கோவே ... இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே,தேவே தேவப்பெருமாளே. ... இறைவனே, தேவர்களின் பெருமாளே.
Similar songs: 599 - தாமா தாம ஆலாபா (திருச்செங்கோடு)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
816 - கூசாதே பார் (திருவாரூர்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
818 - பாலோ தேனோ பாகோ (திருவாரூர்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
1039 - சாவா மூவா வேளே (பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
1040 - நாராலே தோல் (பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
1041 - மாதா வோடே (பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
1042 - வாராய் பேதாய் (பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
Songs from this thalam திருவாரூர்
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000