சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
90   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 63 )  

முகிலாமெனும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனாதன தனனந் தாத்த
     தனனாதன தனனந் தாத்த
           தனனாதன தனனந் தாத்த ...... தனதான


முகிலாமெனு மளகங் காட்டி
     மதிபோலுயர் நுதலுங் காட்டி
           முகிழாகிய நகையுங் காட்டி ...... அமுதூறு
மொழியாகிய மதுரங் காட்டி
     விழியாகிய கணையுங் காட்டி
           முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே
வகையாமிள முலையுங் காட்டி
     யிடையாகிய கொடியுங் காட்டி
           வளமானகை வளையுங் காட்டி ...... யிதமான
மணிசேர்கடி தடமுங் காட்டி
     மிகவேதொழி லதிகங் காட்டு
           மடமாதர்கள் மயலின் சேற்றி ...... லுழல்வேனோ
நகையால்மத னுருவந் தீத்த
     சிவனாரருள் சுதனென் றார்க்கு
           நலநேயரு ளமர்செந் தூர்க்கு ...... ளுறைவோனே
நவமாமணி வடமும் பூத்த
     தனமாதெனு மிபமின் சேர்க்கை
           நழுவாவகை பிரியங் காட்டு ...... முருகோனே
அகமேவிய நிருதன் போர்க்கு
     வரவேசமர் புரியுந் தோற்ற
           மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி
அயிராவத முதுகின் தோற்றி
     யடையாமென இனிதன் பேத்து
           மமரேசனை முழுதுங் காத்த ...... பெருமாளே.

முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும்
காட்டி முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு மொழி
ஆகிய மதுரம் காட்டி
விழி ஆகிய கணையும் காட்டி முகம் ஆகிய கமலம் காட்டி
மலை போலே வகையாம் இள முலையும் காட்டி இடை
ஆகிய கொடியும் காட்டி
வளமான கை வளையும் காட்டி இதமான மணி சேர்
கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் மட
மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ
நகையால் மதன் உருவம் தீத்த சிவனார் அருள் சுதன்
என்று ஆர்க்கு(ம்) நலனே அருள் அமர் செந்தூர்க்குள்
உறைவோனே
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின்
சேர்க்கை நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே
அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர் புரியும் தோற்றம்
அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி அயிராவதம் முதுகின்
தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் அமரேசனை
முழுதும் காத்த பெருமாளே.
மேகம் போன்ற கூந்தலைக் காட்டி, பிறை போலச் சிறந்த நெற்றியைக் காட்டி, முல்லை அரும்பு போன்ற பற்களைக் காட்டி, அமுதம் ஊறுகின்ற பேச்சு என்னும் இனிமையைக் காட்டி, கண் என்னும் அம்பைக் காட்டி, முகம் என்னும் தாமரையைக் காட்டி, மலை போல ஒழுங்குள்ள இளமையான மார்பகத்தைக் காட்டி, இடை என்னும் கொடியைக் காட்டி, வளப்பம் பொருந்திய கை வளையல்களைக் காட்டி, இன்பம் தருவதான, அழகு வாய்ந்த பெண்குறியைக் காட்டி, (தங்கள்) தொழிலை மிக அதிகமாகக் காட்டும் அழகிய (விலை) மாதர்களின் மயக்கச் சேற்றில் அலைவேனோ? புன்சிரிப்பால் மன்மதனுடைய உருவத்தை எரித்து அழித்த சிவபெருமான் அருளிய பிள்ளை என்று விளங்கி, யாவர்க்கும் நன்மையே அருள் செய்து வீற்றிருக்கும் திருச்செந்தூரில் உறைபவனே, ஒன்பது சிறந்த மணிகளால் ஆகிய மாலை தோன்றும் மார்பகத்தை உடைய மாதாகிய, யானை மகள் மின்னலைப் போன்ற அழகுடைய தேவயானையின் சேர்க்கையை நழுவ விடாமல் அன்பு காட்டும் முருகனே, அகங்காரம் கொண்ட அசுரனாகிய சூரன் சண்டைக்கு வரவும், போர் புரியும் எண்ணம் உன் மனத்தில் உதிக்கும் முன்னே அபயம் தந்து, உன்னிடம் முறையிட்டு, ஐராவதம் ஆகிய யானையின் முதுகின் மேல் விளங்குபவனும் (நாங்கள்) அடைக்கலம் எனக் கூறி இனிமையுடனும் அன்புடனும் போற்றியவனுமாகிய தேவர்கள் தலைவனான இந்திரனை முழுமையும் காத்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும்
காட்டி முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு மொழி
ஆகிய மதுரம் காட்டி
... மேகம் போன்ற கூந்தலைக் காட்டி,
பிறை போலச் சிறந்த நெற்றியைக் காட்டி, முல்லை அரும்பு
போன்ற பற்களைக் காட்டி, அமுதம் ஊறுகின்ற பேச்சு என்னும்
இனிமையைக் காட்டி,
விழி ஆகிய கணையும் காட்டி முகம் ஆகிய கமலம் காட்டி
மலை போலே வகையாம் இள முலையும் காட்டி இடை
ஆகிய கொடியும் காட்டி
... கண் என்னும் அம்பைக் காட்டி,
முகம் என்னும் தாமரையைக் காட்டி, மலை போல ஒழுங்குள்ள
இளமையான மார்பகத்தைக் காட்டி, இடை என்னும் கொடியைக் காட்டி,
வளமான கை வளையும் காட்டி இதமான மணி சேர்
கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும் மட
மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ
... வளப்பம்
பொருந்திய கை வளையல்களைக் காட்டி, இன்பம் தருவதான,
அழகு வாய்ந்த பெண்குறியைக் காட்டி, (தங்கள்) தொழிலை மிக
அதிகமாகக் காட்டும் அழகிய (விலை) மாதர்களின் மயக்கச் சேற்றில்
அலைவேனோ?
நகையால் மதன் உருவம் தீத்த சிவனார் அருள் சுதன்
என்று ஆர்க்கு(ம்) நலனே அருள் அமர் செந்தூர்க்குள்
உறைவோனே
... புன்சிரிப்பால் மன்மதனுடைய உருவத்தை எரித்து
அழித்த சிவபெருமான் அருளிய பிள்ளை என்று விளங்கி, யாவர்க்கும்
நன்மையே அருள் செய்து வீற்றிருக்கும் திருச்செந்தூரில் உறைபவனே,
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின்
சேர்க்கை நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே
...
ஒன்பது சிறந்த மணிகளால் ஆகிய மாலை தோன்றும் மார்பகத்தை
உடைய மாதாகிய, யானை மகள் மின்னலைப் போன்ற அழகுடைய
தேவயானையின் சேர்க்கையை நழுவ விடாமல் அன்பு காட்டும் முருகனே,
அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர் புரியும் தோற்றம்
அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி அயிராவதம் முதுகின்
தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும் அமரேசனை
முழுதும் காத்த பெருமாளே.
... அகங்காரம் கொண்ட அசுரனாகிய
சூரன் சண்டைக்கு வரவும், போர் புரியும் எண்ணம் உன் மனத்தில்
உதிக்கும் முன்னே அபயம் தந்து, உன்னிடம் முறையிட்டு, ஐராவதம்
ஆகிய யானையின் முதுகின் மேல் விளங்குபவனும் (நாங்கள்)
அடைக்கலம் எனக் கூறி இனிமையுடனும் அன்புடனும்
போற்றியவனுமாகிய தேவர்கள் தலைவனான இந்திரனை முழுமையும்
காத்த பெருமாளே.
Similar songs:

90 - முகிலாமெனும் (திருச்செந்தூர்)

தனனாதன தனனந் தாத்த
     தனனாதன தனனந் தாத்த
           தனனாதன தனனந் தாத்த ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 90