சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
98   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 53 - வாரியார் # 70 )  

வரியார் கருங்கண்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனா தனந்த ...... தனதான


வரியார் கருங்கண் ...... மடமாதர்
மகவா சைதொந்த ...... மதுவாகி
இருபோ துநைந்து ...... மெலியாதே
இருதா ளினன்பு ...... தருவாயே
பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே
பரமே சுரன்ற ...... னருள்பாலா
அரிகே சவன்றன் ...... மருகோனே
அலைவா யமர்ந்த ...... பெருமாளே.

வரியார் கருங்கண் மடமாதர்
மகவாசை தொந்தம் அதுவாகி
இருபோது நைந்து மெலியாதே
இருதாளின்அன்பு தருவாயே
பரிபாலனஞ் செய்து அருள்வோனே
பரமேசுரன்தன் அருள்பாலா
அரி கேசவன்தன் மருகோனே
அலைவாய் அமர்ந்த பெருமாளே.
வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய கண்களை உடைய இளம்பெண்கள், குழந்தைகள் என்கிற ஆசையாகிய பந்தத்திலே அகப்பட்டு, பகலும் இரவும் மனம் நைந்துபோய் மெலிவு அடையாமல், உன் இரு திருவடிகளின்மீது அன்பைத் தந்தருள்வாயாக. காத்து ரட்சித்து அருள் செய்பவனே, பரமசிவன் தந்தருளிய குழந்தையே, ஹரி கேசவனாம் திருமாலின் மருமகனே, திருச்சீரலைவாயாம் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
வரியார் கருங்கண் மடமாதர் ... வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய
கண்களை உடைய இளம்பெண்கள்,
மகவாசை தொந்தம் அதுவாகி ... குழந்தைகள் என்கிற ஆசையாகிய
பந்தத்திலே அகப்பட்டு,
இருபோது நைந்து மெலியாதே ... பகலும் இரவும் மனம்
நைந்துபோய் மெலிவு அடையாமல்,
இருதாளின்அன்பு தருவாயே ... உன் இரு திருவடிகளின்மீது
அன்பைத் தந்தருள்வாயாக.
பரிபாலனஞ் செய்து அருள்வோனே ... காத்து ரட்சித்து அருள்
செய்பவனே,
பரமேசுரன்தன் அருள்பாலா ... பரமசிவன் தந்தருளிய குழந்தையே,
அரி கேசவன்தன் மருகோனே ... ஹரி கேசவனாம் திருமாலின்
மருமகனே,
அலைவாய் அமர்ந்த பெருமாளே. ... திருச்சீரலைவாயாம்
திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
Similar songs:

98 - வரியார் கருங்கண் (திருச்செந்தூர்)

தனனா தனந்த ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 98