சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
158   பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 72 - வாரியார் # 195 )  

சீ உதிரம் எங்கும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த தானதன தந்த
          தானதன தந்த தானதன தந்த தனதான


சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
     தானுமிக வந்து மேவிடம யங்கு
          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
     பார்முழுது மண்ட கோளமுந டுங்க
          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.

சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும்
     மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
     தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே
தீது உள குணங்களே பெருகு தொந்த
     மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு
     சேரிடு நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா
ஆயது நமன் கை போக உயிர் அந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
     ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார் பால்
ஆசையை விரும்பியே விரக சிங்கி
     தானும் மிக வந்து மேவிட மயங்கும்
     ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு
     பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
     வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே
வாரி உற அண்டி வீறொடு முழங்கு
     நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
     வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து
     மேயல் புரி செம் கண் மால் மருக துங்க
     வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக
வேலை விடு கந்த காவிரி விளங்கு
     கார் கலிசை வந்த சேவகன் வணங்க
     வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.
சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி, புழுக்கள் நிறைந்த, நிலை இல்லாத மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை, நெருப்பும், நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது நீங்காதோ? தீமையான குணங்களே வளர்கின்ற பந்தபாசம் மாயையில் வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள நரம்பு ஆகிய இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத இப்படியான இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில் மிகவும் கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி, அது நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து, காம விஷம் மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக. மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து, உலகம் முழுவதும், அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து பயங்கரமாக நின்று, மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால் எல்லாவற்றையும் வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து, நீரை உண்ணும் கோபத்தோடு எதிர்த்து வந்த (குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும், புல்லாங்குழலின் இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து மேயவிட்ட சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே, பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி, வேலைச் செலுத்திய கந்தவேளே, காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற ஊரில் வாழ்கின்ற வீரன் உன்னைத் துதிக்க வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் ... சீழும் இரத்தமும் எங்கும்
பொருந்தி, புழுக்கள் நிறைந்த,
மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை ... நிலை இல்லாத
மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை,
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே ... நெருப்பும்,
நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது
நீங்காதோ?
தீது உள குணங்களே பெருகு தொந்த ... தீமையான குணங்களே
வளர்கின்ற பந்தபாசம்
மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு ... மாயையில்
வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள
நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா ... நரம்பு ஆகிய
இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் ... இப்படியான
இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில்
விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி ... மிகவும்
கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி,
நிலை என்று மடவார் பால் ஆசையை விரும்பியே ... அது
நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து,
விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் ... காம விஷம்
மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே ... ஆழ்ந்த
துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக.
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு ... மாயையில்
வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து,
பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க ... உலகம் முழுவதும்,
அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக
வாய் பிளறி நின்று ... வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து
பயங்கரமாக நின்று,
மேக நிகர் தன் கை அதனாலே ... மேகம் போன்ற கருமையான
தனது தும்பிக்கையால்
வாரி உற அண்டி வீறொடு முழங்கு ... எல்லாவற்றையும்
வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து,
நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த ... நீரை உண்ணும்
கோபத்தோடு எதிர்த்து வந்த
வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம் ...
(குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும்
ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும்,
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து ... புல்லாங்குழலின்
இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து
மேயல் புரி செம் கண் மால் மருக ... மேயவிட்ட சிவந்த
கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே,
துங்கவேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக ...
பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து
பொடியாகும்படி,
வேலை விடு கந்த ... வேலைச் செலுத்திய கந்தவேளே,
காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க ...
காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற
ஊரில் வாழ்கின்ற வீரன் உன்னைத் துதிக்க
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே. ... வீரை
நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே.
Similar songs:

158 - சீ உதிரம் எங்கும் (பழநி)

தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த தானதன தந்த
          தானதன தந்த தானதன தந்த தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 158 thalam %E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF thiru name %E0%AE%9A%E0%AF%80+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D