சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
201   சுவாமிமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 93 - வாரியார் # 199 )  

அவாமருவு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதனன தானந் ...... தனதானா


அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
     மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
     றிவாகியுள மால்கொண் ...... டதனாலே
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
     மிராகரனை வாவென் ...... றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
     தியானமுறு பாதந் ...... தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
     முலாசமுட னேறுங் ...... கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
     ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
     சுதாஎயினர் மானன் ...... புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.

அவாமருவு இ(ன்)னா வசுதை காணுமடவாரெனும்
     அவார்கனலில் வாழ்வென்றுணராதே
அராநுகர வாதையுறு தேரைகதி நாடும்
     அறிவாகி உளம் மால்கொண்டு அதனாலே
சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத
     திமிர ஆகரனை வாவென்று அருள்வாயே
திரோத மலமாறும் அடியார்கள் அருமாதவர்
     தியானமுறு பாதந் தருவாயே
உவா இனிய கானுவில் நிலாவும் மயில்வாகனம்
     உலாசமுடன் ஏறுங் கழலோனே
உலா உதயபாநு சதகோடி உருவான
     ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வரா சிவ
     சுதா எயினர் மான் அன்புடையோனே
சுராதிபதி மால் அயனு மாலொடு சலாமிடு
     சுவாமிமலை வாழும் பெருமாளே.
ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு மண்ணாசையும், விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம். அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல் பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை, உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக. உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும், அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும் உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும் மயிலை வாகனமாகக் கொண்டு, அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே, வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே, பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே, ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே, தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு வணக்கம் செய்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
அவாமருவு இ(ன்)னா ... ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம்
விளைவதற்கு
வசுதை ... மண்ணாசையும்,
காணுமடவாரெனும் ... விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற
பெண்ணாசையும் காரணமாம்.
அவார்கனலில் வாழ்வென்றுணராதே ... அவர்களுடன் வாழ்க்கை
நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல்
அராநுகர வாதையுறு தேரைகதி ... பாம்பின் வாயில் அகப்பட்டு
துன்பமுறு தவளையின் கதி அடைந்த
நாடும் அறிவாகி ... அந்நிலையிலும் இன்பத்தை நாடும்
அறிவுடையவனாகி
உளம் மால்கொண்டு அதனாலே ... உள்ளத்தில் மயக்கம் கொண்டு
அதன் காரணமாக
சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத ... சிவாய என்ற
திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத
திமிர ஆகரனை ... அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள
அடியேனை,
வாவென்று அருள்வாயே ... உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக
என்றழைத்து அருள்வாயாக.
திரோத மலமாறும் அடியார்கள் ... உன்னை மறத்தல் என்ற குற்றம்
இல்லாத மெய்யடியார்களாலும்,
அருமாதவர் தியானமுறு ... அரிய பெரிய தவ முனிவர்களாலும்
தியானம் செய்யப்படும்
பாதந் தருவாயே ... உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.
உவா இனிய கானுவில் நிலாவும் ... இளமைமிகுந்து, இனிய
கானகத்தில் ஒளிவீசித் திரியும்
மயில்வாகனம் ... மயிலை வாகனமாகக் கொண்டு,
உலாசமுடன் ஏறுங் கழலோனே ... அதன்மீது குதூகலத்துடன்
ஏறும் வீரக் கழலோனே,
உலா உதயபாநு சதகோடி உருவான ... வானில் உலாவும் உதய
சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல
ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே ... ஒளிபடைத்த
அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே,
துவாதச புயாசல ... பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை
உடையவனே,
ஷடாநந வரா சிவசுதா ... ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே,
சிவனின் சேயே,
எயினர் மான் அன்புடையோனே ... வேடர் குலத்து மான் போன்ற
வள்ளியிடம் அன்புடையவனே,
சுராதிபதி மால் அயனு மாலொடு ... தேவேந்திரனும், திருமாலும்,
பிரம்மனும் அன்போடு
சலாமிடு ... வணக்கம் செய்கின்ற
சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில் வாழ்கின்ற
பெருமாளே.
Similar songs:

201 - அவாமருவு (சுவாமிமலை)

தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதனன தானந் ...... தனதானா

Songs from this thalam சுவாமிமலை

201 - அவாமருவு

202 - ஆனனம் உகந்து

203 - ஆனாத பிருதி

204 - இராவினிருள் போலும்

205 - இருவினை புனைந்து

206 - எந்தத் திகையினும்

207 - ஒருவரையும் ஒருவர்

208 - கடாவினிடை

209 - கடிமா மலர்க்குள்

210 - கதிரவனெ ழுந்து

211 - கறை படும் உடம்பு

212 - காமியத் தழுந்தி

213 - குமரகுருபர முருக குகனே

214 - குமர குருபர முருக சரவண

215 - கோமள வெற்பினை

216 - சரண கமலாலயத்தில்

217 - சுத்திய நரப்புடன்

218 - செகமாயை உற்று

219 - சேலும் அயிலும்

220 - தருவர் இவர்

221 - தெருவினில் நடவா

222 - நாசர்தங் கடை

223 - நாவேறு பா மணத்த

224 - நிலவினிலே

225 - நிறைமதி முகமெனும்

226 - பரவரிதாகி

227 - பலகாதல் பெற்றிட

228 - பாதி மதிநதி

229 - மகர கேதனத்தன்

230 - மருவே செறித்த

231 - முறுகு காள

232 - வாதமொடு சூலை

233 - வாரம் உற்ற

234 - வார்குழலை

235 - வார்குழல் விரித்து

236 - விடமும் வடிவேலும்

237 - விரித்த பைங்குழல்

238 - விழியால் மருட்டி

1336 - வறுமைப் பாழ்பிணி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 201 thalam %E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 thiru name %E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81