சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
32   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 26 )  

இருகுழை யெறிந்த

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
     தனதன தனந்த தந்தன ...... தனதான


இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
     இணைசிலை நெரிந்தெ ழுந்திட ...... அணைமீதே
இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட
     இதழமு தருந்த சிங்கியின் ...... மனமாய
முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ்
     முலைமுக டுகொண்டெ ழுந்தொறு ...... முருகார
முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
     முகடியு நலம்பி றந்திட ...... அருள்வாயே
எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
     மிதழியொ டணிந்த சங்கரர் ...... களிகூரும்
இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி
     யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே
அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
     ளணிமணி சதங்கை கொஞ்சிட ...... மயில்மேலே
அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம்
     அலைபொரு தசெந்தில் தங்கிய ...... பெருமாளே.

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து
வந்திட
இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே இருள்
அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட
இதழ் அமுது அருந்து சிங்கியின் மன(ம்) மாய
முருகொடு கலந்த சந்தன அளறு படு குங்குமம் கமழ்
முலை முகடு கொண்டு எழுந்தொறும் முருகு ஆர
முழு மதி புரந்த சிந்துர அரிவையர் உடன் கலந்திடு
முகடியு(ம்) நலம் பிறந்திட அருள்வாயே
எரி விட(ம்) நிமிர்ந்த குஞ்சியி(ல்) நிலவொடும் எழுந்த
கங்கையும் இதழி ஒடு அணிந்த சங்கரர் களி கூரும்
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி
எனது உயிர் எனும் த்ரி அம்பகி பெரு வாழ்வே
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுர(ம்) நெருங்கு
தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட
மயில் மேலே அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர
முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய
பெருமாளே.
காதுகளில் விளங்கும் இரண்டு குண்டலங்களையும் தாக்குகின்ற கெண்டை மீன் போன்ற கண்கள் ஒப்பற்ற குமிழம் மலர் போன்ற நாசியை நெருங்கி வந்திடவும், இரண்டு வில் போன்ற புருவங்களும் நெரிந்து மேல் எழுந்திடவும், படுக்கையின் மேல் இருண்ட கரிய கூந்தல் கற்றையும், கொடி போன்ற இடையைச் சுற்றிய பெரிய ஆடையும் குலைந்திடவும், இதழ் அமுதத்தை உண்ணும் நஞ்சில் என் மனம் அழிந்து அழியவும், நறு மணத்துடன் கலந்த சந்தனச் சேற்றுடன் குங்குமம் மணக்கும் மார்பின் உச்சி விம்மிப் பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்ப, முழு நிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக. நெருப்பைப் போல் ஒளி விட்டு நிமிர்ந்த சடையில் சந்திரனுடன் எழுந்த கங்கை நதியும், கொன்றையுடன் தரித்த சிவபெருமான் மகிழ்ச்சி மிகக் கொள்ளும் இமய மலையரசன் பெற்ற கரிய குயில், பச்சை நிறம் கொண்ட கிளி, எனது உயிர் என்று நான் போற்றும் மூன்று கண்களை உடையவள் ஆகிய பார்வதி பெற்ற செல்வமே, அரையில் கட்டிய பொன்வடம், ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கியுள்ள தண்டைகள், அழகிய மணியாலாகிய சதங்கை இவை எல்லாம் கொஞ்ச, மயிலின் மேல் உள்ளம் பூரித்து எப்போதும் வருகின்ற குமரனே, முற்புறத்தில் அலைகள் வந்து மோதுகின்ற கரையுடைய திருச்செந்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து
வந்திட
... காதுகளில் விளங்கும் இரண்டு குண்டலங்களையும்
தாக்குகின்ற கெண்டை மீன் போன்ற கண்கள் ஒப்பற்ற குமிழம்
மலர் போன்ற நாசியை நெருங்கி வந்திடவும்,
இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே இருள்
அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட
...
இரண்டு வில் போன்ற புருவங்களும் நெரிந்து மேல் எழுந்திடவும்,
படுக்கையின் மேல் இருண்ட கரிய கூந்தல் கற்றையும், கொடி
போன்ற இடையைச் சுற்றிய பெரிய ஆடையும் குலைந்திடவும்,
இதழ் அமுது அருந்து சிங்கியின் மன(ம்) மாய ... இதழ்
அமுதத்தை உண்ணும் நஞ்சில் என் மனம் அழிந்து அழியவும்,
முருகொடு கலந்த சந்தன அளறு படு குங்குமம் கமழ்
முலை முகடு கொண்டு எழுந்தொறும் முருகு ஆர
... நறு
மணத்துடன் கலந்த சந்தனச் சேற்றுடன் குங்குமம் மணக்கும்
மார்பின் உச்சி விம்மிப் பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்ப,
முழு மதி புரந்த சிந்துர அரிவையர் உடன் கலந்திடு
முகடியு(ம்) நலம் பிறந்திட அருள்வாயே
... முழு நிலாப்
போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன்
கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக.
எரி விட(ம்) நிமிர்ந்த குஞ்சியி(ல்) நிலவொடும் எழுந்த
கங்கையும் இதழி ஒடு அணிந்த சங்கரர் களி கூரும்
...
நெருப்பைப் போல் ஒளி விட்டு நிமிர்ந்த சடையில் சந்திரனுடன்
எழுந்த கங்கை நதியும், கொன்றையுடன் தரித்த சிவபெருமான்
மகிழ்ச்சி மிகக் கொள்ளும்
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி
எனது உயிர் எனும் த்ரி அம்பகி பெரு வாழ்வே
... இமய
மலையரசன் பெற்ற கரிய குயில், பச்சை நிறம் கொண்ட கிளி,
எனது உயிர் என்று நான் போற்றும் மூன்று கண்களை உடையவள்
ஆகிய பார்வதி பெற்ற செல்வமே,
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுர(ம்) நெருங்கு
தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட
... அரையில்
கட்டிய பொன்வடம், ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கியுள்ள
தண்டைகள், அழகிய மணியாலாகிய சதங்கை இவை எல்லாம்
கொஞ்ச,
மயில் மேலே அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர ...
மயிலின் மேல் உள்ளம் பூரித்து எப்போதும் வருகின்ற குமரனே,
முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய
பெருமாளே.
... முற்புறத்தில் அலைகள் வந்து மோதுகின்ற
கரையுடைய திருச்செந்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.
Similar songs:

32 - இருகுழை யெறிந்த (திருச்செந்தூர்)

தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
     தனதன தனந்த தந்தன ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 32