சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
6.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், பண் - காப்புத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் ) Audio: https://www.youtube.com/watch?v=R_eoKaUD4Cs |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.007  
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
பண் - காப்புத்திருத்தாண்டகம் (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும், தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும், தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும், நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும், நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்- கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக் கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே. | [1] |
தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருக்கோவல்வீரட்டம், வெண்ணெய் நல்லூர், ஆர்த்து அருவி வீழ் சுனைநீர் அண்ணாமலை, அறையணி நல்லூரும்(ம்), அரநெறியும், - ஏத்துமின்கள்! நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது, இன்னம்பர், ஏகம்ப(ம்) மும், கார்த் தயங்கு சோலைக் கயிலாய (ம்) மும்-கண்நுதலான் தன்னுடைய காப்புக்களே. | [2] |
சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருப் பாதிரிப்புலியூர், திரு ஆமாத்தூர், துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தான(ம்)மும், - அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர்-பழனம், நல்லம், கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும், கழுக்குன்றும்-தம்முடைய காப்புக்களே. | [3] |
திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா, உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும், மாற்பேறும், மாந்துறையும், வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம், கேதாரம், மா மேரு(வ்)வும்- கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே. | [4] |
செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம், கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும், குடமூக்கும், கோகரணம், கோலக்காவும், பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர், பயற்றூர், பராய்த்துறையும், கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே. | [5] |
தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந் தண் பிடவூரும், சென்று நின்று பவ்வம் திரியும் பருப்பத(ம்)மும், பறியலூர் வீரட்டம், பாவநாசம், மவ்வம் திரையும் மணி முத்த(ம்)மும், மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழி(ய்)யும், கவ்வை வரிவண்டு பண்ணேபாடும் கழிப்பாலை-தம்முடைய காப்புக்களே. | [6] |
தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், தீக்காலிவல்லம், திரு வேட்டி(ய்)யும், உண் நீர் ஆர் ஏடகமும், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், விண்ணார் விடையான் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, மிக்க கண் ஆர் நுதலார் கரபுர(ம்)மும்-காபாலியார் அவர்தம் காப்புக்களே. | [7] |
தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திண்டீச்சுரமும், திருப்புக(ல்)லூர், எள்ளும் படையான் இடைத்தான(ம்)மும், ஏயீச்சுரமும், நல் ஏமம், கூடல், கொள்ளும் இலயத்தார் கோடிகாவும், குரங்கணில் முட்டமும், குறும்பலாவும், கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம்-தம்முடைய காப்புக்களே. | [8] |
சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும், பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும், பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம், நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும், நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும், கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே. | [9] |
சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு வாஞ்சியமும், திரு நள்ளாறும், அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும், ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும், எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்) இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும், கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க் கரக்கோயில்-காப்புக்களே. | [10] |
தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச் செம்பொன்பள்ளி, திருப் பூவணமும், வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும், மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி, ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக் கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே. | [11] |
திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு அளப்பூர், தெற்கு ஏறு சித்தவடம், உரு நீர் வளம் பெருகு மா நிருப(ம்)மும் - மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும் பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற - பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம் கருநீலவண்டு அரற்றும் காளத்தி(ய்)யும், கயிலாயம்-தம்முடைய காப்புக்களே. | [12] |