சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.112
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாது ஓர் கூறு உகந்து, பண் - நட்டராகம் (திருவாடானை ஆதிரத்தினேசுவரர் அம்பாயிரவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=_VfzpCKqXOY Audio: https://sivaya.org/audio/2.112 Maathor kooruganthu.mp3 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.112  
மாது ஓர் கூறு உகந்து,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவாடானை ; (திருத்தலம் அருள்தரு அம்பாயிரவல்லியம்மை உடனுறை அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருவடிகள் போற்றி )
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய ஆதியான் உறை ஆடானை போதினால் புனைந்து, ஏத்துவார் தமை வாதியா வினை மாயுமே. | [1] |
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று ஆடலான் உறை ஆடானை தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ, வீடும், நுங்கள் வினைகளே | [2] |
மங்கை கூறினன், மான்மறி உடை அம் கையான், உறை ஆடானை தம் கையால் தொழுது, ஏத்த வல்லார் மங்கு நோய் பிணி மாயுமே. | [3] |
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை அண்ணலான் உறை ஆடானை வண்ண மா மலர் தூவிக் கைதொழ எண்ணுவார் இடர் ஏகுமே. | [4] |
கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கை அணி(ம்) மலரால் வணங்கிட, வெய்ய வல்வினை வீடுமே. | [5] |
வான் இள(ம்) மதி மல்கு வார்சடை ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த ஊனம் உள்ள ஒழியுமே. | [6] |
துலங்கு வெண்மழு ஏந்தி, சூழ் சடை அலங்கலான், உறை ஆடானை நலம் கொள் மா மலர் தூவி, நாள்தொறும் வலம் கொள்வார் வினை மாயுமே. | [7] |
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை அந்தம் இல்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழும் சிந்தையார் வினை தேயுமே. | [8] |
மறைவலாரொடு வானவர் தொழு அறையும் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை ஏத்த, தீவினை பறையும்; நல்வினை பற்றுமே. | [9] |
மாயனும் மலரானும் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மா மலர் தூவிக் கைதொழ, தீய வல்வினை தீருமே. | [10] |
வீடினார் மலி வெங்கடத்து நின்று ஆடலான் உறை ஆடானை நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ் பாட, நோய் பிணி பாறுமே. | [11] |