![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.095
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடல் வண்டு அறை கொன்றை, பண் - பியந்தைக்காந்தாரம் (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) அரைசிலிநாதர் பெரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=5WKav8ehvVA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.095  
பாடல் வண்டு அறை கொன்றை,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) ; (திருத்தலம் அருள்தரு பெரியம்மை உடனுறை அருள்மிகு அரைசிலிநாதர் திருவடிகள் போற்றி )
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல் கங்கை, கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி, வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல் ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே. | [1] |
ஏறு பேணி அது ஏறி; இள மதக்களிற்றினை எற்றி, வேறு செய்து, அதன் உரிவை வெம்புலால் கலக்க மெய் போர்த்த ஊறு தேன் அவன்; உம்பர்க்கு ஒருவன்; நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம்; ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே. | [2] |
கங்கை நீர் சடைமேலே கதம் மிக, கதிர் இளவன மென் கொங்கையாள் ஒருபாகம் மருவிய, கொல்லை வெள் ஏற்றன்; சங்கை ஆய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து, அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே. | [3] |
மிக்க காலனை வீட்டி, மெய் கெடக் காமனை விழித்து புக்க ஊர் இடு பிச்சை உண்பது, பொன் திகழ் கொன்றை, தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து, ஆமை அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே. | [4] |
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி, தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழச் சரம் அது துரந்து வான் அஞ்சும் பெருவிடத்தை உண்டவன்; மாமறை ஓதி; ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே. | [5] |
பரிய மாசுணம் கயிறா, பருப்பதம் அதற்கு மத்து ஆக, பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய, கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு, அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே. | [6] |
வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல் அரக்கன் கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றி, பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு, அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே. | [8] |
குறிய மாண் உரு ஆகிக் குவலயம் அளந்தவன் தானும், வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும், செறிவு ஒணா வகை எங்கும் தேடியும், திருவடி காண அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே. | [9] |
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியைப் பறித்துத் திரளை(க்) கையில் உண்பவரும், தேரரும், சொல்லிய தேறேல்! பொருளை, பொய் இலி மெய் எம் நாதனை, பொன் அடி வணங்கும் அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே. | [10] |
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும், சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த, வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே. | [11] |