சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தொழும் ஆறு வல்லார், துயர் பண் - இந்தளம் (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=9tjZGkpZQUk |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.020  
தொழும் ஆறு வல்லார், துயர்
பண் - இந்தளம் (திருத்தலம் திருஅழுந்தூர் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தராம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர் வழிபாடு செய் மா மடம் மன்னினையே. | [1] |
கடல் ஏறிய நஞ்சு அமுதுஉண்டவனே! உடலே! உயிரே! உணர்வே! எழிலே! அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர் விடலே! தொழ, மா மடம் மேவினையே. | [2] |
கழிகாடலனே! கனல் ஆடலினாய்! பழிபாடு இலனே! அவையே பயிலும் அழிபாடு இலராய், அழுந்தை மறையோர் வழிபாடுசெய் மா மடம் மன்னினையே. | [3] |
வானே! மலையே! என மன் உயிரே! தானே தொழுவார் தொழு தாள் மணியே! ஆனே! சிவனே! அழுந்தையவர், எம் மானே! என, மா மடம் மன்னினையே. | [4] |
அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்! நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும், இலைஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ! நிலையா அது கொள்க என, நீ நினையே! | [5] |
நறவு ஆர் தலையின் நயவா! உலகில் பிறவாதவனே! பிணி இல்லவனே! அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர் மறவாது எழ, மா மடம் மன்னினையே. | [6] |
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம் சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில் அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர் நெடு மா நகர் கைதொழ, நின்றனையே. | [7] |
பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும் கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்! அரியாய்! எளிவாய்! அழுந்தை மறையோர் வெரியார் தொழ, மா மடம் மேவினையே. | [8] |
மணி நீள் முடியால் மலையை அரக்கன் தணியாது எடுத்தான் உடலம் நெரித்த அணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர் மணி மா மடம் மன்னி இருந்தனையே. | [9] |
முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர் நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள் அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர் படியால் தொழ, மா மடம் பற்றினையே. | [10] |
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத் திருஞானசம்பந்தன செந்தமிழ்கள், உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே. | [11] |