சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.902
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி பண் - (திருக்கிளியன்னவூர் ) |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.902  
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி
பண் - (திருத்தலம் திருக்கிளியன்னவூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர் பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே. | [1] |
வன்மை செய்யும் வறுமைவந் தாலுமே தன்மை யில்லவர் சார்பிருந் தாலுமே புன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமே நன்மை யுற்ற கிளியன்ன வூரனே. | [2] |
பன்னி நின்ற பனுவல் அகத்தியன் உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன் மன்னி நாகம் முகத்தவர் ஓதலும் முன்னில் நின்ற கிளியன்ன வூரனே. | [3] |
அன்பர் வேண்டும் அவையளி சோதியான் வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற் துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல் இன்பந் தேக்குங் கிளியன்ன வூரனே. | [4] |
செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர் உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே. | [5] |
எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள் நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால் புண்பொ றாதகி ளியன்ன வூரனே. | [6] |
மூவ ராயினும் முக்கண்ண நின்னருள் மேவு றாதுவி லக்கிடற் பாலரோ தாவு றாதுன தைந்தெழுத் துன்னிட தேவ ராக்குங் கிளியன்ன வூரனே. | [7] |
திரம் மிகுத்த சடைமுடி யான்வரை உரம் மிகுத்த இராவணன் கீண்டலும் நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால் வரம் மிகுத்த கிளியன்ன வூரனே. | [8] |
நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன் பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர் நாதன் உற்றன நன்மலர் பாய்இருக் கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே. | [9] |
மங்கை யர்க்கர சோடுகு லச்சிறை பொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன் சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும் இங்கு ரைத்த கிளியன்ன வூரனே. | [10] |
நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே குறையி லாது கொடுமை தவிர்வரே. | [11] |