சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி பண் - இந்தளம் (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=hcE7aR2PXm8 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.034  
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி
பண் - இந்தளம் (திருத்தலம் திருப்பழுவூர் ; (திருத்தலம் அருள்தரு அருந்தவநாயகியம்மை உடனுறை அருள்மிகு வடவனநாதர் திருவடிகள் போற்றி )
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன், அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர் மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச, பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே. | [1] |
கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல் ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர் மாடம் மலி சூளிகையில் ஏறி, மடவார்கள் பாடலொலி செய்ய, மலிகின்ற பழுவூரே. | [2] |
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய ஒருத்தர், புரிநூலர், இடம் என்பர் வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர், பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே. | [3] |
எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார் கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி, பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே. | [4] |
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும் நாதன், நமை ஆள் உடைய நம்பன், இடம் என்பர் வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன் பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே. | [5] |
மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி, பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே. | [6] |
மந்தணம் இருந்து புரி மா மடிதன் வேள்வி சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர் பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே. | [7] |
உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு, பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே. | [8] |
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட, அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர் ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே. | [9] |
மொட்டை அமண் ஆதர், துகில் மூடு விரி தேரர், முட்டைகள் மொழிந்த முனிவான்தன் இடம் என்பர் மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம், பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே. | [10] |
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும் பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச் சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி, வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே. | [11] |