சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.016
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; பண் - திருக்குறுந்தொகை (திருப்பேரெயில் ) Audio: https://www.youtube.com/watch?v=wIi2_zDbzWc |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.016  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்பேரெயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை கொள் கண்டம் உடைய கபாலியார்; துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்; பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே. | [1] |
கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும், வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும், தணக்குவார்; தணிப்பார்; எப்பொருளையும் பிணக்குவார் அவர்-பேரெயிலாளரே. | [2] |
சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை விரிவிப்பார்; வெயில் பட்ட விளங்கு ஒளி எரிவிப்பார்; தணிப்பார்; எப்பொருளையும் பிரிவிப்பார் அவர்-பேரெயிலாளரே. | [3] |
செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள் உறுவிப்பார்; பலபத்தர்கள் ஊழ்வினை அறுவிப்பார்; அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் அவர்-பேரெயிலாளரே. | [4] |
மற்றையார் அறியார்; மழுவாளினார்; பற்றி ஆட்டி ஓர் ஐந்தலைப்பாம்பு அரைச் சுற்றியார் அவர்; தூ நெறியால் மிகு பெற்றியார் அவர்-பேரெயிலாளரே. | [5] |
திருக்கு வார்குழல் செல்வன சேவடி- இருக்கு வாய்மொழியால்-தனை ஏத்துவார் சுருக்குவார், துயர்; தோற்றங்கள் ஆற்றறப் பெருக்குவார் அவர், பேரெயிலாளரே. | [6] |
முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்- தன் ஐயார் எனில்-தான் ஓர் தலைமகன்; என்னை ஆளும் இறையவன்; எம்பிரான்; பின்னையார் அவர்-பேரெயிலாளரே. | [7] |
உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு இழைத்தும், எந்தைபிரான் என்று இராப்பகல் அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் பிழைப்பு நீக்குவர்-பேரெயிலாளரே. | [8] |
நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய, வார் உலாம் வனமென்முலையாளொடும், பேர் உளார் அவர்-பேரெயிலாளரே. | [9] |
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்; தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்; மாணியாய் மண் அளந்தவன், நான்முகன், பேணியார் அவர் பேரெயிலாளரே. | [10] |
மதத்த வாள் அரக்கன் மணிப் புட்பகம் சிதைக்கவே, திருமாமலைக்கீழ்ப் புக்கு, பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே. | [11] |