சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.031
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரை தரு பவளமும், சீர் பண் - கொல்லி (திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1iE23OOVx2g |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.031  
திரை தரு பவளமும், சீர்
பண் - கொல்லி (திருத்தலம் திருமயேந்திரப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு திருமேனியழகர் திருவடிகள் போற்றி )
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும், கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும், வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள் அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே! | [1] |
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை, கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும், வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள் செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே! | [2] |
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும், தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும், மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள் ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே! | [3] |
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும் மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள் எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே! | [4] |
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச் சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன், மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள் கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே! | [5] |
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும், இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்- மந்திரமறை வளர் மயேந்திரப்பள் அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே! | [6] |
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு படர்சடை மதியினன், மயேந்திரப்பள் அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே! | [7] |
சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக் கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன், மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப்பள் அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே! | [8] |
நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன், ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்; மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப்பள் யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே! | [9] |
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும், படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர் மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள் இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே! | [10] |
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள் நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல், நம் பரம் இது என, நாவினால் நவில்பவர் உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே. | [11] |