சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவல்லம் வல்லநாதர் வல்லாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=sZs5as1K7o4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.113   எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருவல்லம் ; (திருத்தலம் அருள்தரு வல்லாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வல்லநாதர் திருவடிகள் போற்றி )
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு
தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

[1]
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத்
தூயவன், தூ மதி சூடி, எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.

[2]
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய;
போர்த்தவன், போதகத்தின் உரிவை;
ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று
சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[3]
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்-
மை, தவழ் திருமகள் வணங்க வைத்து,
பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச்
செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[4]
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி,
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[5]
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால்
உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று,
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

[6]
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

[7]
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன்; அருமறை அங்கம் ஆனான்;
கரியவன், நான்முகன், காண ஒண்ணாத்
தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[8]
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள்,
குன்றிய அற உரை கூறா வண்ணம்
வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும்
சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[9]
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று,
நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list