சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.018
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துள மதி உடை மறி பண் - காந்தாரபஞ்சமம் (திருவைகல்மாடக்கோயில் வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uBQNJJFbi4M |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.018  
துள மதி உடை மறி
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருவைகல்மாடக்கோயில் ; (திருத்தலம் அருள்தரு வைகலம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வைகனாதேசுவரர் திருவடிகள் போற்றி )
துள மதி உடை மறி தோன்று கையினர் இளமதி அணி சடை எந்தையார், இடம் உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய, வள மதி தடவிய, மாடக்கோயிலே. | [1] |
மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர் மைய கண் மலைமகளோடும் வைகு இடம் வையகம் மகிழ்தர, வைகல் மேல்-திசை செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே. | [2] |
கணி அணி மலர்கொடு, காலை மாலையும் பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர், தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே. | [3] |
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்- தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம் வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்-திசை, செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே. | [4] |
விடம் அடை மிடற்றினர், வேத நாவினர் மடமொழி மலைமகளோடும் வைகு இடம் மட அனம் நடை பயில் வைகல் மா நகர்க் குட திசை நிலவிய மாடக்கோயிலே. | [5] |
நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில், திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே. | [6] |
எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன் திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம் வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை, வரு முகில் அணவிய மாடக்கோயிலே. | [7] |
மலை அன இருபது தோளினான் வலி தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் வலம் வரு மலை அன மாடக்கோயிலே. | [8] |
மாலவன், மலரவன், நேடி மால் கொள மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் மாலைகொடு அணி மறைவாணர் வைகலில், மால் அன மணி அணி மாடக்கோயிலே. | [9] |
கடு உடை வாயினர், கஞ்சி வாயினர் பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் வடமலை அனைய நல் மாடக்கோயிலே. | [10] |
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை, சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்- பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே. | [11] |