![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
Add audio link
12.600
சேக்கிழார்
பத்தராய்ப் பணிவார் சருக்கம்
காரணபங் கயம்ஐந்தின்
கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி
பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த
சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்தர்
அடித்தொண்டின் வழியடைந்தார்.
1
நான்முகன் முதலான காரணக் கடவுளர் ஐவர்க்கும் உரிய ஐந்து தாமரைகளுடன் இருக்கும் இடங்களைக் கடந்து, மேற்சென்று, அப்பால் நிறைவுடையதாய், உள் பொருளாய், தூண்டப்படாத பேரொளியாய் உள்ள சிவம், ஞான ஒளிவீசி விளங்கும் நாதமுடிவில் உள்ளத்தைச் செலுத்த, அவ்விடத்தில் காணப்பெறும் சிவபரம் பொருளிடத்தில் நிறுத்திய சித்தத்தைக் கொண்டிருப்பவர் 'சித்ததைச் சிவன்பால் வைத்தார்' என்பார்; இவர் தமக்கு உவமையில்லாத அம்பலத்துள் விளங்கும் நான்மறையின் முதல்வராய கூத்தப் பெருமானாரின் திருவடித் தொண்டின் வழியில் நின்று அவரை அடைந்தவர் ஆவர்.
*** ஐந்தின் காரணக் கடவுளர், பங்கயக் கடவுளர் எனத் தனித் தனியே கூட்டுக. படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும், அயன் முதலிய ஐவரையும் கொண்டு இறைவன் இயற்றுவித்தலின் இவ்வைவரும் 'காரணக் கடவுளர்' எனப்பட்டனர். இவர்கள் ஐவ கைத் தாமரைப் பீடங்களில் வீற்றிருப்பவர் என்பர். இவர்களை இதயம் முதலாக உச்சித்துளை ஈறாகவுள்ள இடங்களில் வைத்து வழிபடல் வேண்டும். இவர்களுக்குரிய இடமும் பிறவும் முன்பக்கத்தில் உள்ள நிரல்கட்டத்தில் காண்க. :
1 அயன் இதயம் ல மண் நாற்கோணம்
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location:
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000