காயம் பலகை கவறைந்து கண்மூன்று ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம் ஏய பெருமான் இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
|
1
|
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு) ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.
|
2
|
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறு படுவன நான்கு பனைஉள ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.
|
3
|
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
|
4
|
ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.
|
5
|
Go to top |
பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.
|
6
|
மூவணை ஏரும் உழுவது முக்காணி தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும் நாவணை கோலி நடுவிற் செறுஉழார் காலணை கோலிக் களர்உழு வார்களே.
|
7
|
ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர் பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின் கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.
|
8
|
பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.
|
9
|
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில் மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.
|
10
|
Go to top |
தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல் மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.
|
11
|
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித் திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன் விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.
|
12
|
இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக் கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
|
13
|
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுக் காதமே.
|
14
|
களர்உழு வார்கள் கருத்தை அறியோம் களர்உழு வார்கள் கருதலும் இல்லை களர்உழு வார்கள் களரின் முளைத்த வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.
|
15
|
Go to top |
கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.
|
16
|
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
|
17
|
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.
|
18
|
ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும் தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும் தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.
|
19
|
எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெளிந்திருந் தோத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.
|
20
|
Go to top |
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும் கூகின்ற நாவலின் தருங்கனி ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.
|
21
|
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
|
22
|
பத்துப் பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.
|
23
|
இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின் இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.
|
24
|
ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.
|
25
|
Go to top |
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுக லுறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.
|
26
|
குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
|
27
|
காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி கூடுபுக் கானது ஐந்து குதிரையும் மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவணை யாமே.
|
28
|
கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.
|
29
|
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான் ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.
|
30
|
Go to top |
பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும் இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.
|
31
|
கூடு பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும் சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.
|
32
|
இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின் குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும் தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.
|
33
|
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.
|
34
|
கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.
|
35
|
Go to top |
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும் கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.
|
36
|
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக் குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும் கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.
|
37
|
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறியறி யாதே.
|
38
|
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.
|
39
|
ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின் மாறுத லின்றி மனைபுக லாமே.
|
40
|
Go to top |
கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடும் கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.
|
41
|
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே.
|
42
|
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்தது முன்பின் வழியே.
|
43
|
கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.
|
44
|
கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர் முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.
|
45
|
Go to top |
கோரை யெழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார் பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.
|
46
|
கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு) ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.
|
47
|
உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து) எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி தழுவி வினைசென்று தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யானே.
|
48
|
பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.
|
49
|
தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர்மகன் நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து) ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.
|
50
|
Go to top |
முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.
|
51
|
அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில் கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.
|
52
|
பன்றியும் பாம்பும்பசு முசு வானரம் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள் குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.
|
53
|
மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம் பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.
|
54
|
நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம் யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை கூரும் மழைபொழி யாது பொழிபுனல் தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.
|
55
|
Go to top |
கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில் மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.
|
56
|
வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர் வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.
|
57
|
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன் விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.
|
58
|
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.
|
59
|
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
|
60
|
Go to top |
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.
|
61
|
பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக் கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.
|
62
|
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள் வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.
|
63
|
வீணையும் தண்டும் வரிவி இசைமுரல் தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே.
|
64
|
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து) அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.
|
65
|
Go to top |
போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.
|
66
|
கோமுற் றமரும் குடிகளும் தம்முளே காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும் வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.
|
67
|
தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால் நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும் மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
|
68
|
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பி னவளோடும் போகம் நுகரும் புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.
|
69
|
தோணிஒன் றுண்டு துறையில் விடுவது ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை ஆணி கலங்கின் அதுஇது ஆமே.
|
70
|
Go to top |