நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம் கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.
|
1
|
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில் கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே.
|
2
|
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு, ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல் கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்- கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே.
|
3
|
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத் தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி, கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே.
|
4
|
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால், நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்- கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.
|
5
|
Go to top |
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை, ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, அங்கணன் என்று ஆதரிக்கும் நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்- கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே.
|
6
|
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான், சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான், மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில் கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே.
|
7
|
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப, சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து, மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும் கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
|
8
|
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத் தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்- கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
|
9
|
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்! நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல் கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.
|
10
|
Go to top |
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை, வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.
|
11
|