அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும் அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
|
1
|
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
|
2
|
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
|
3
|
பரனாய்ப் பராபரங் காட்டி உலகில் தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத் தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.
|
4
|
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.
|
5
|
Go to top |
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.
|
6
|
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும் அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில் எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
|
7
|
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
|
8
|
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ் சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே.
|
9
|
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 4,
|
10
|
Go to top |