கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.
|
1
|
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந் தூண்டு விளக்கின் சுடரறி யாரே.
|
2
|
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.
|
3
|
விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக் கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.
|
4
|
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி மேலுங் கிடந்து விரும்புவன் நானே.
|
5
|
Go to top |
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும் ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.
|
6
|
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும் பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம் பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால் பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.
|
7
|
கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார் விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும் எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.
|
8
|
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருங்குழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
|
9
|
எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவ தறியாமல் எய்திய நாளில் இருந்துகண் டேனே. 8,
|
10
|
Go to top |