மதிவட்ட மாக வரையைந்தும் நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும் அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே.
|
1
|
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும் கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை அற்ற தறியா தழிகின்ற வாறே.
|
2
|
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும் கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே.
|
3
|
திருந்து தினமத் தினத்தி னொடுநின் றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி வருந்துத லின்றி மனைபுக லாமே.
|
4
|
மனைபுகு வீரும் மகத்திடை நாடி எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு வினையறி யாறு விளங்கிய நாலே.
|
5
|
Go to top |
நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும் பாலங் கடந்தது பத்துப் பதினைந்து கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் டாலங் கடந்ததொன் றாரறி வாரே.
|
6
|
ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந் தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.
|
7
|
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத் தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால் உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.
|
8
|
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரணம் மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே.
|
9
|
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர் இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.
|
10
|
Go to top |
நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும் சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும் உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.
|
11
|
ஓவிய மான உணர்வை அறிமின்கள் பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை; தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.
|
12
|
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்; கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.
|
13
|
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.
|
14
|
சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமல் கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.
|
15
|
Go to top |
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோகம் நோக்கிடில் ஆத்தனு மாகி அமர்ந்திடும் ஒன்றே.
|
16
|
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும் சென்றிடும் முப்பதுஞ் சேர இருந்திடில் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே.
|
17
|
கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாற்றிடு நூறு தலைப்பெய்ய லாமே.
|
18
|
சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் மூத்துடன் கோடி யுகமது வாமே.
|
19
|
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங் குகங்கோடி கண்டங் குயருறு வாரே.
|
20
|
Go to top |
உயருறு வார்உல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல் கயலுறு கண்ணியைக் காணகி லாரே.
|
21
|
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லார்நயம் பேசி விடுவர்கள் காணகி லாதார் கழிந்த பொருளெலாம் காணகி லாமற் கழிகின்ற வாறே.
|
22
|
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலுமாகும் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே.
|
23
|
கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும் திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.
|
24
|
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குக் கூறலு மாமே.
|
25
|
Go to top |
கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறும் மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே.
|
26
|
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே.
|
27
|
அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை அவன்இவ னாகும் பரிசது கேள்நீ அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும் அவன்இவன் வட்டம தாகிநின் றானே.
|
28
|
வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே.
|
29
|
காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும் காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 15,
|
30
|
Go to top |