குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.
|
1
|
கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம் அடக்க லுறுமவன் றானே அமரன் விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.
|
2
|
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.
|
3
|
முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
|
4
|
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.
|
5
|
Go to top |
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம் பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும் அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
|
6
|
இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன் அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின் துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.
|
7
|
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே.
|
8
|
நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப் படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.
|
9
|
சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.
|
10
|
Go to top |
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.
|
11
|
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.
|
12
|
கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள் எய்தி யவனை இசையினால் ஏத்துமின் ஐவ ருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 34,
|
13
|