அறிவறி வென்ற அறிவும் அனாதி அறிவுக் கறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியின் பிறப்பறுந் தானே.
|
1
|
பசுப்பல கோடி பிரமன் முதலாப் பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
|
2
|
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும் நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித் தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால் குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
|
3
|
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும் கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம் வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
|
4
|
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான் கட்டிய கேவலம் காணும் சகலத்தைச் சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.
|
5
|
Go to top |
நாடும் பதியுடன் நற்பசு பாசமும் நீடுமா நித்த நிலையறி வார்இல்லை நீடிய நித்தம் பசுபாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.
|
6
|
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
|
7
|
பதிபசு பாசம் பயில்வியா நிற்கப் பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும் பதிபசு பாசம் பயில்நில் லாவே.
|
8
|
பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமும் காட்டி மதிதந்த ஆனந்த மாநந்தி காணும் துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.
|
9
|
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும் அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.
|
10
|
Go to top |
படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப் படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.
|
11
|
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.
|
12
|
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும் மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன் மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி ஆகும் படிபடைப் போன்அரன் மே.
|
13
|
படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும் துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்(து) அடைத்த அனாதியை ஐந்தென லாமே.
|
14
|
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு) ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.
|
15
|
Go to top |
வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத் தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.
|
16
|
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ண லடிசேர் உபாயம தாகுமே.
|
17
|
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல் ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.
|
18
|
பாசம் பயில்உயிர் தானே பரம்முதல் பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப பாசம் பயிலப் பதிபரம் ஆதலால் பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.
|
19
|
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே. 17,
|
20
|
Go to top |