![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=NL_FxOzMKtg Add audio link
3.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநாரையூர் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய,
பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்)
உரி-தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
1
தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு நாரையூர் மேயான்;
பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம்,
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார் மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.
2
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும்
மைமிடற்றன்
ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம்
தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின
வீடுமே.
3
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்,
அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண்,
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.
4
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு
இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர்
திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
5
Go to top
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி,
பைங்கொன்றைத்-
தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன்,
மலைமகளைச்
சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை-
யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.
6
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து,
நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே.
7
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில,
ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில்,
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
8
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான்,
ஒளிர்புன்சடைமேல் ஓர்
வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு
யாழ்முரலத்
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு
நாரையூர் மேய
ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா,
அடைவோமே.
9
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில் உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர் தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!
10
Go to top
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி,
மண் மதியாது போய், வான் புகுவர், வானோர்
எதிர்கொளவே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநாரையூர்
2.086
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரையினில் வந்த பாவம், உணர்
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காம்பினை வென்ற மென்தோளி பாகம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் இடை வெங்கடு நஞ்சம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
5.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
வீறு தான் உடை வெற்பன்
Tune - திருக்குறுந்தொகை
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
6.074
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
Tune - திருத்தாண்டகம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
11.031
நம்பியாண்டார் நம்பி
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
Tune -
(திருநாரையூர் )
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000