முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும், கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப் பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.
|
1
|
தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும், முனகு தீரத் தொழுது எழுமின்களோ! கனகப்புன் சடையான் கடம்பந்துறை நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே.
|
2
|
ஆரியம் தமிழோடு இசை ஆனவன், கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன், காரிகை உடையான், கடம்பந்துறை, சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!
|
3
|
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை- வண்ண நல் மலரான், பல தேவரும், கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை நண்ண, நம் வினை ஆயின நாசமே.
|
4
|
மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ! கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!
|
5
|
Go to top |
நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப் பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ! கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை, அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.
|
6
|
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்; கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!
|
7
|
பூ மென்கோதை உமை ஒருபாகனை ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்! காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.
|
8
|
பார் அணங்கி வணங்கிப் பணி செய நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர் காரணன் கடம்பந்துறை மேவிய ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே
|
9
|
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட! பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்; காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.
|
10
|
Go to top |