ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே! என்றேன், நானே; கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள் பூதப்பல் படையாய்! என்றேன், நானே; பேர் ஆயிரம் உடையாய்! என்றேன், நானே; பிறை சூடும் பிஞ்ஞகனே! என்றேன், நானே; ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
1
|
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா! புராணனே! என்றேன், நானே; மூவா மதிசூடி! என்றேன், நானே; முதல்வா! முக்கண்ணனே! என்றேன், நானே; ஏ ஆர் சிலையானே! என்றேன், நானே; இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி, ஆவா! என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
2
|
அம் சுண்ண வண்ணனே! என்றேன், நானே; அடியார்கட்கு ஆர் அமுதே! என்றேன், நானே; நஞ்சு அணி கண்டனே! என்றேன், நானே; நாவலர்கள் நால்மறையே! என்றேன், நானே; நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே! என்றேன், நானே; அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
3
|
தொல்லைத் தொடு கடலே! என்றேன், நானே; துலங்கும் இளம்பிறையாய்! என்றேன், நானே; எல்லை நிறைந்தானே! என்றேன், நானே; ஏழ்நரம்பின் இன் இசையாய்! என்றேன், நானே; அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய்! என்றேன், நானே; எல்லை ஆம் ஐயாறா! என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
4
|
இண்டைச் சடைமுடியாய்! என்றேன், நானே; இருசுடர் வானத்தாய்! என்றேன், நானே; தொண்டர் தொழப்படுவாய்! என்றேன், நானே; துருத்தி நெய்த்தானத்தாய்! என்றேன், நானே; கண்டம் கறுத்தானே! என்றேன், நானே; கனல் ஆகும் கண்ணானே! என்றேன், நானே; அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
5
|
Go to top |
பற்றார் புரம் எரித்தாய்! என்றேன், நானே; பசுபதீ! பண்டரங்கா! என்றேன், நானே; கற்றார்கள் நாவினாய்! என்றேன், நானே; கடு விடை ஒன்று ஊர்தியாய்! என்றேன், நானே; பற்று ஆனார் நெஞ்சு உளாய்! என்றேன், நானே; பார்த்தற்கு அருள்செய்தாய்! என்றேன், நானே; அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
6
|
விண்ணோர் தலைவனே! என்றேன், நானே; விளங்கும் இளம்பிறையாய்! என்றேன், நானே; எண்ணார் எயில் எரித்தாய்! என்றேன், நானே; ஏகம்பம் மேயானே! என்றேன், நானே; பண் ஆர் மறை பாடி! என்றேன், நானே; பசுபதீ! பால்நீற்றாய்! என்றேன், நானே; அண்ணா! ஐயாறனே! என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
7
|
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே! என்றேன், நானே; சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல, செல்வம் தருவானே! என்றேன், நானே; பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய்! என்றேன், நானே; அவன் என்றே, ஆதியே! ஐயாற(ன்)னே!என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!
|
8
|
கச்சி ஏகம்பனே! என்றேன், நானே; கயிலாயா! காரோணா! என்றேன், நானே; நிச்சல் மணாளனே! என்றேன், நானே; நினைப்பார் மனத்து உளாய்! என்றேன், நானே; உச்சம் போது ஏறு ஏறீ! என்றேன், நானே; உள்குவார் உள்ளத்தாய்! என்றேன், நானே; அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
9
|
வில் ஆடி வேடனே! என்றேன், நானே; வெண்நீறு மெய்க்கு அணிந்தாய்! என்றேன், நானே; சொல் ஆய சூழலாய்! என்றேன், நானே; சுலா ஆய தொன்னெறியே! என்றேன், நானே; எல்லாம் ஆய் என் உயிரே! என்றேன், நானே; இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்! என்றேன், நானே; அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்றுஎன்றே நான் அரற்றி நைகின்றேனே!.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|