புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.
|
1
|
விடலேறு படநாக மரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும் அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில் கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித் திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே.
|
2
|
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில் கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா லிறகுலர்த்திக் கூதனீங்கிச் செங்கானல் வெண்குருகு பைங்கான லிரைதேருந் திருவையாறே.
|
3
|
ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் பலிக்குழல்வா ருமையாள்பங்கர் தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில் மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும் தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே.
|
4
|
நீரோடு கூவிளமு நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத் தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில் காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித் தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே.
|
5
|
Go to top |
வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப் பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில் காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித் தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.
|
6
|
நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில் குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.
|
7
|
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும் மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில் இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.
|
8
|
மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும் மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில் கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.
|
9
|
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர் எண்டோளர் முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில் செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.
|
10
|
Go to top |
அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம் பெருமானை யந்தண்காழி மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல் இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா லீசனடி யேத்துவார்கள் தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே.
|
11
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|