ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல் ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.
|
1
|
கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே.
|
2
|
ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது தான்மா மறைஅறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால் ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.
|
3
|
உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின் கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து) அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.
|
4
|
எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர் பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச் செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.
|
5
|
Go to top |
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும் தோய்ந்த கருமத் துரிசக லாதே.
|
6
|
ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து தேனை யருள்செய் தெரிசனா வத்தையில் ஆன வகையை விடும் அடைந் தாய்விட ஆன மலாதீதம் அப்பரந் தானே.
|
7
|
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச் சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய் அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.
|
8
|
வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.
|
9
|
கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில் நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து) இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.
|
10
|
Go to top |
தானே சிவமான தன்மை தலைப்பட ஆன மலமும்அப் பாசபே தங்களும் ஆன குணமும்ப ரான்மா உபாதியும் பானுவின் முன்மதி போல்பட ராவே.
|
11
|
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு) அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத்தக்க மாலும் திசைமுகன் றானும் உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.
|
12
|
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும் ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு) ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாகுமே.
|
13
|
ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும் தாடித் தெழுந்த தமருக ஓசையும் பாடி யெழுகின்ற வேதா கமங்களும் நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.
|
14
|
முன்னை யறிவினில் செய்த முதுதவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப் பின்னை அறிவது பேயறி வாகுமே.
|
15
|
Go to top |
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.
|
16
|
தான்அவ னாகும் சமாதிகை கூடினால் ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம் ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து) ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.
|
17
|
தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும் தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.
|
18
|
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான் ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.
|
19
|
அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.
|
20
|
Go to top |
தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை வானவர் ஆதியை மாமணிச் சோதியை ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.
|
21
|
ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.
|
22
|
ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில் தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து) ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின் கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.
|
23
|
அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும் அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும் அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.
|
24
|
சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச் சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச் சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.
|
25
|
Go to top |
தானே அறியான் அறிவிலோன் றானல்லன் தானே அறிவான் அறிவு சதசத்தென் றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத் தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.
|
26
|
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும் தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.
|
27
|
தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும் பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.
|
28
|
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால் மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.
|
29
|
உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம் உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.
|
30
|
Go to top |
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர் கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும் பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு) அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.
|
31
|
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச் சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று) ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.
|
32
|
உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.
|
33
|
சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர் பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர் ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.
|
34
|
எய்தின செய்யும் இருமாயா சத்தியின் எய்தின செய்யும் இருஞான சத்தியின் எய்தின செய்யும் இருஞால சத்தியின் எய்தின செய்யும் இறையருள் தானே.
|
35
|
Go to top |
திருந்தினர் விட்டார் திருவில் நரகம் திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம் திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.
|
36
|
அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன்அரு ளாமே.
|
37
|
அருளான சத்தி அனல்வெம்மை போலப் பொருள்அவ னாகத்தான் போதம் புணரும் இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும் தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.
|
38
|
ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள் பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப் பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.
|
39
|
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் அபோதம் புணர்போதா போதமும் நாதம் அநாத முடன்நாதா நாதமும் ஆதல் அருளின் அருளிச்சை யாமே.
|
40
|
Go to top |
மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப் பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப் பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள் ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.
|
41
|
ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன் ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள் தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.
|
42
|
தீண்டற் கரிய திருவடி நேயத்தை மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.
|
43
|
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.
|
44
|
தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம் தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால் தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர் தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
|
45
|
Go to top |
தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன்னை அறியின் தலைப்படும் தன்னினில் தன்னை அறிகில னாயிடில் தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.
|
46
|
அறியகி லேன்என் றரற்றாதே நீயும் நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை இருசுட ராகிய இயற்றவல் லானும் ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.
|
47
|
மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.
|
48
|
ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர் தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர் கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.
|
49
|
குறியறி யார்கள் குறிகாண மாட்டார் குறியறி யார்கடம் கூடல் பெரிது குறியறி ஆவகை கூடுமின் கூடில் அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.
|
50
|
Go to top |
ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்? வானோர் தலைவி மயக்கத் துறநிற்க யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன் தானோ பிறப்போ டிறப்பறி யானே.
14, |
51
|