சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.460   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்


Add audio link Add Audio
களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை
அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.

1


உழவர்கள், களை என எடுத்த தாமரை மலர்களிலிருந்து பெருகிய தேனானது குளத்தை நிறைக்க உள்ளதும், ஒப்பற்ற செங்கோல் சிறப்பால் எண் திசையிலும் தம் வெற்றித் தூண்களை நாட்டி அரசு செய்யும் சோழ மன்னரின் காவிரியாறு பாயும் நாட்டில் உள்ளதும் வரிஞ்சையூர் என்பதாகும். *** வரிஞ்சையூர் - தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் என்னும் ஊருக்குத் தெற்கில் ஏறத்தாழ 7 கிமீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்த் திருக்கோயிலில் இந்நாயனாரின், திருவுருவம் எழுந்தருளு விக்கப் பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.

2


இவ்வரிஞ்சையூரில் வாய்மைப் பண்பையுடைய வேளாளர் குலமானது பெருஞ்சிறப்படையது; அக்குலத்துள் வந்து தோன்றியவரும், நான்முகன் முதலான தேவர்களும் நினைத்தற்கரிய சிலம்பை அணிந்த சிவபெருமானின் திருவடிக்கு ஆட்செய்பவரு மான ஒருவர் வாழ்ந்து வந்தார்.
குறிப்புரை:

அத்த ராகிய வங்கணர் அன்பரை
இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியால்
சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.

3


அவர் தலைவரான சிவபெருமானின் அடியவரை இவ்வுலகத்தில் இகழ்ந்து பேசுபவரின் நாவை வலிந்து அரியும் ஆற்றலால் 'சத்தியார்' எனும் பெயரை உடையவர்.
குறிப்புரை:

தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.

4


சிவனடியாரைத் தீங்கு கூறி இகழ்ந்த நன்மை இல்லாரின் நாவைத் துண்டித்தற்கு ஏற்ப, வளைந்த 'தண்டாயம்' என்ற கருவிகொண்டு இழுத்து, அவ்விடத்தேயே கூர்மையான கத்தியால் அரிந்து, அன்பு பெருகும் சிறப்புடைய தொண்டில் உயர்ந்து விளங்கினார். *** தண்டாயம் - பற்றி இழுக்கும் குறடு போன்றதொரு கருவி. வலித்து - இழுத்து. ஆயில் - கூர்மை.
அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேரு லகத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.

5


அத்தகைய ஆண்மையுடைய திருத்தொண்டில் நிலைபெற்ற வலிமையுடன் பல ஆண்டுகள் அன்புடன் செய்து வந்தவர், திருச்சடையில் கங்கை யாற்றைச் சூடிய இறைவரின் செம்மை நெறித்தொண்டினைத் தொடர்ந்தும் செய்து வந்தவராவார்.
குறிப்புரை:

Go to top
ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.

6


ஐயம் இல்லாமல் அரியதான இத்திருப்பணியை மெய்ம்மையாகச் செய்து வந்த வீரத்தன்மையுடைய தொண்டரான சத்தியார், உலகு உய்ய அழகிய அம்பலத்தில் ஆடுபவரின் செம்மை தரும் திருவடிநிழலைச் சேர்ந்தார். *** ஐயம் - இச்செயல் செயத்தகுமோ எனும் ஐயம். இறை வனை இகழ்தலினும், அடியாரை இகழ்தல் பெருங்குற்றமாதலின் அச்செயல் செய்வாரின் நாவை அரிதல் கொடிதன்று என்ற துணிவும் உறைப்பும் உடையவர்.
நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து
ஆய மாதவத் தையடி கள்ளெனும்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.

7


சிவபெருமானின் தொண்டர்களைப் போற்றாதார் வீழ, அவர்களின் நாவை அரியும் சத்தி நாயனாரின் திருவடிகளை வணங்கிச் சிவநெறியான மாதவத்தை யுடைய ஐயடிகள் என்னும் தூய 'காடவரின்' அடிமைத் திறத்தைச் சொல்வாம். *** சாய - வீழ இனி அச்செயலைச் செய்யாது ஒழிய. சத்தி நாயனார் புராணம் முற்றிற்று.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 12.460