நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத் தாரானே தாமரை மேலயன் றான்றொழும் சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவ ரூனமி லாதாரே.
|
1
|
மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர் விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும் நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற் பதியானே யென்பவர் பாவமிலாதாரே.
|
2
|
விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர் மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம் கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில் எண்ணானே யென்பவ ரேதமி லாதாரே.
|
3
|
தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில் மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.
|
4
|
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே
|
5
|
Go to top |
ஆற்றானே யாறணி செஞ்சடை யாடர வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும் போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில் நீற்றானே யென்பவர் மேல்வினை மேவாவே.
|
6
|
சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள் ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர் காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில் ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.
|
7
|
கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம் எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர் கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில் அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.
|
8
|
பிறையானே பேணிய பாடலொ டின்னிசை மறையானே மாலொடு நான்முகன் காணாத இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில் உறைவானே யென்பவர் மேல்வினை யோடுமே.
|
9
|
செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில் குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.
|
10
|
Go to top |
ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில் ஆய்ந்தசீ ரானடி யேத்திய ருள்பெற்ற பாய்ந்தநீர்க் காழியுண் ஞானசம் பந்தன்சொல் வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.
|
11
|