சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருத்தேவூர் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு தேன்மொழியம்மை உடனுறை அருள்மிகு தேவகுருநாதர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=fYnixUyPNIE   Add audio link Add Audio
பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.


1


ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் றுதிசெய மகிழ்ந்தவன் றூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.


2


மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயற் றேவூர்
அறவன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.


3


முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் றன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழிற் றேவூர்
அத்தன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.


4


பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன் செறிபொழிற் றேவூர்
ஆடு வானடி யடைந்தன மல்லலொன் றிலமே.


5


Go to top
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுடென் றேவூர்
அங்க ணன்றனை யடைந்தன மல்லலொன் றிலமே.


6


வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் றக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.


7


தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுக னெரிந்து
வெருவ வூன்றிய திருவிர னெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறுநற் றென்றல்வந் துலவிய தேவூர்
அரவு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.


8


முந்திக் கண்ணனு நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிற லிருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரறிருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தன மல்லலொன் றிலமே.


9


பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுடென் றேவூர்
ஆறு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே


10


Go to top
அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய வெழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்தேவூர்
2.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பண் நிலாவிய மொழி உமை
Tune - காந்தாரம்   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
3.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காடு பயில் வீடு, முடை
Tune - சாதாரி   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 2.082