பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
1
|
கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும் பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார் இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும் பெயரர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
2
|
கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின் மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
3
|
மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார் விண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள் பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும் பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
4
|
மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக் கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும் நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல் பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
5
|
Go to top |
புற்றர வம்புலித் தோலரைக் கோவணம் தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப் பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
6
|
துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி இணையிலேற் றையுகந் தேறுவ ரும்எரி கணையினான் முப்புரம் செற்றவர் கையினில் பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
7
|
சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல் அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும் பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
8
|
வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும் எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர் கரியமா லோடயன் காண்பரி தாகிய பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
9
|
நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும் ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர் சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர் பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.
|
10
|
Go to top |
நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப் பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச் சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய் ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.
|
11
|