உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித் தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ் சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.
|
1
|
உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக் கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச் சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.
|
2
|
நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள் தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந் திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.
|
3
|
பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார் சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம் கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
|
4
|
மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர் நாவகை நாவர் போலு நான்மறை ஞான மெல்லாம் ஆவகை யாவர் போலு மாதிரை நாளர் போலும் தேவர்க டேவர் போலும் திருப்பயற் றூர னாரே.
|
5
|
Go to top |
ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித் தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப் பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞக னெந்தை பெம்மான் தீயறாக் கையர் போலுந் திருப்பயற் றூர னாரே.
|
6
|
ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப் பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக் காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
|
7
|
தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க் கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும் சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.
|
8
|
புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்து இலங்களைப் போக நின்று விரண்டையு நீக்கி யொன்றாய் மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுட் போக மாகிச் சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே.
|
9
|
மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப் பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத் தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.
|
10
|
Go to top |