சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.032   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பயற்றூர் - திருநேரிசை அருள்தரு காவியங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு திருப்பயத்தீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=4bt4zrxddYA   Add audio link Add Audio
உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.


1


உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.


2


நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.


3


பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.


4


மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலு மாதிரை நாளர் போலும்
தேவர்க டேவர் போலும் திருப்பயற் றூர னாரே.


5


Go to top
ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞக னெந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந் திருப்பயற் றூர னாரே.


6


ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.


7


தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.


8


புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று விரண்டையு நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே.


9


மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பயற்றூர்
4.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர
Tune - திருநேரிசை   (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.032