சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.055   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவலம்புரம் - திருநேரிசை அருள்தரு வடுவகிர்க்கண்ணம்மை உடனுறை அருள்மிகு வலம்புரநாதர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=2A7VC50MMRY   Add audio link Add Audio
தெண்டிரை தேங்கியோ தஞ் சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகண் மதுக்கண் மாந்தும் வலம்புரத் தடிக டம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தா மிருந்த வாறே.


1


மடுக்களில் வாளை பாய வண்டின மிரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித் தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.


2


தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை யஞ்சுங் கொண்டே யன்பினா லமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிக டம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.


3


முளையெயிற் றிளநல் லேனம் பூண்டுமொய் சடைக டாழ
வளையெயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகயப் போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி
வளைபயி லிளைய ரேத்தும் வலம்புரத் தடிக டாமே.


4


சுருளுறு வரையின் மேலாற் றுலங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த விளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறு மடிய ரெல்லா மங்கையின் மலர்க ளேந்த
மருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே.


5


Go to top
நினைக்கின்றே னெஞ்சு தன்னா னீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினா லமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே யினிவலம் புரவ னீரே.


6


செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை யடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே.


7


அருகெலாங் குவளை செந்நெல் அகலிலை யாம்ப னெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாம்
குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே.


8


கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேற் றிசைமுக னவனுங் காணான்
ஒருவரை யுச்சி யேறி யோங்கினா ரோங்கி வந்து
அருமையி லெளிமை யானா ரவர்வலம் புரவ னாரே.


9


வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற வரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந் தொலைந்துட னழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பா ரவர்வலம் புரவ னாரே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவலம்புரம்
3.103   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொடி உடை மும்மதில் ஊடு
Tune - பழம்பஞ்சுரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
4.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   தெண் திரை தேங்கி ஓதம்
Tune - திருநேரிசை   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
6.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   மண் அளந்த மணி வண்ணர்
Tune - திருத்தாண்டகம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
7.072   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
Tune - காந்தாரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.055