பாசமுங் கழிக்க கில்லா வரக்கரைப் படுத்துத் தக்க வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில் நேசமிக் கன்பி னாலே நினைமினீர் நின்று நாளும் தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரம்மே.
|
1
|
முற்றின நாள்க ளென்று முடிப்பதே கார ண ( ம் ) மாய் உற்றவன் போர்க ளாலே யுணர்விலா வரக்கர் தம்மைச் செற்றமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைப் பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை யீசன் பாலே.
|
2
|
கடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித் திடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத் தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி உடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.
|
3
|
குன்றுபோற் றோளு டைய குணமிலா வரக்கர் தம்மைக் கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில் நன்றுபோ னெஞ்ச மேநீ நன்மையை யறிதி யாயில் சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருவிரா மேச்சு ரம்மே.
|
4
|
வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத் தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.
|
5
|
Go to top |
ஆர்வல நம்மின் மிக்கா ரென்றவவ் வரக்கர் கூடிப் போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித் தேர்வலஞ் செற்ற மால்செய் திருவிரா மேச்சு ரத்தைச் சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை யெந்தை பாலே.
|
6
|
வாக்கினா லின்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம் போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மாறான் தேக்குநீர் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை நோக்கினால் வணங்கு வார்க ணோய்வினை நுணுகு மன்றே.
|
7
|
பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத் தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.
|
8
|
கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம் வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.
|
9
|
வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார் புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச் செங்கண்மால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத் தங்கணா லெய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.
|
10
|
Go to top |
வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி யரக்கர் கோனை விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில் திரைகள்முத் தால்வ ணங்குந் திருவிரா மேச்சு ரத்தை உரைகள்பத் தாலு ரைப்பா ருள்குவா ரன்பி னாலே.
|
11
|