சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.061   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஇராமேச்சுரம் - திருநேரிசை அருள்தரு பர்வதவர்த்தனி உடனுறை அருள்மிகு இராமநாதேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=Ry6uuPOzyEY   Add audio link Add Audio
பாசமுங் கழிக்க கில்லா வரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே நினைமினீர் நின்று நாளும்
தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரம்மே.


1


முற்றின நாள்க ளென்று முடிப்பதே கார ண ( ம் ) மாய்
உற்றவன் போர்க ளாலே யுணர்விலா வரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை யீசன் பாலே.


2


கடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.


3


குன்றுபோற் றோளு டைய குணமிலா வரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோ னெஞ்ச மேநீ நன்மையை யறிதி யாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருவிரா மேச்சு ரம்மே.


4


வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத்
தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.


5


Go to top
ஆர்வல நம்மின் மிக்கா ரென்றவவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய் திருவிரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை யெந்தை பாலே.


6


வாக்கினா லின்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மாறான்
தேக்குநீர் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க ணோய்வினை நுணுகு மன்றே.


7


பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.


8


கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.


9


வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தங்கணா லெய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.


10


Go to top
வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி யரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந் திருவிரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பா ருள்குவா ரன்பி னாலே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஇராமேச்சுரம்
3.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலை, வளர் தண்மதியோடு அயலே
Tune - காந்தாரபஞ்சமம்   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
3.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரிதரு மா மணி நாகம்
Tune - சாதாரி   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
4.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,
Tune - திருநேரிசை   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.061