வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித் தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான் ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே.
|
1
|
வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத் தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன் கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்த ஊனமில் வேத முடையனை நாமடி யுள்குவதே.
|
2
|
பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை உண்டங் கறுத்தது மூரொடு நாடவை தானறியும் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே.
|
3
|
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் றானுடையான் கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான் கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான் அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட வானவரே.
|
4
|
பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ ளத்திரள்போல் முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன மேகொடுத்த கற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்த குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே.
|
5
|
Go to top |
போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவம் சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக் காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி யூரிருந்த கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர் கூறுவதே.
|
6
|
அட்டது காலனை யாய்ந்தது வேதமா றங்கமன்று சுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக் கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்த குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே.
|
7
|
அட்டு மொலிநீ ரணிமதி யும்மல ரானவெல்லாம் இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை மாலையங்கைக் கட்டு மரவது தானுடை யான்கண்டி யூரிருந்த கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே.
|
8
|
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத் தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக் காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும் ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே.
|
9
|
மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத் தண்டி யமரர் கடைந்த கடல்விடங் கண்டருளி உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி யோடிநண்ணக் கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே.
|
10
|
Go to top |