சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.058   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பழையாறை வடதளி - திருக்குறுந்தொகை அருள்தரு சோமகலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சோமேசுவரர் திருவடிகள் போற்றி
பழையாறை வடதளியில் உள்ள சிவபெருமானை எவரும் வழிபடாவண்ணம், திருக்கோயிலின் சன்னதியையும் விமானத்தையும் சமணர்கள் மறைத்து மூடி வைத்திருந்தனர், இதனை அறிந்த அப்பர் பிரான், மறைக்கப்பட்ட சிவபெருமானின் திருமேனியைக் கண்டால் அல்லது பழையாறை வடதளி தலத்தை விட்டு அகலமாட்டேன் என்ற உறுதியுடன், உண்ணாவிரதம் நோன்பு இருந்தார். இந்த செய்தி, சிவபெருமானால் பல்லவ மன்னனுக்கு அவனது கனவில் உணர்த்தப்பட்டது. மன்னனும் பழையாறை விரைந்து வந்து, அங்கிருந்த சமணப் பள்ளியில் தங்கியிருந்த சமணர்களை விரட்டியடித்தான். மேலும் விமானத்தையும் சன்னதியையும் மறைத்திருந்த மறைப்புகளை அகற்றி, பெருமானின் பூசனைக்கு வேண்டிய பொருட்கள் நிலையாக கிடைப்பதற்காக நிபந்தங்கள் செய்த பின்னர், நாவுக்கரசரை வணங்கினான். அப்பர் பிரானும், திருக்கோயிலின் உள்ளே சென்று, தலை எலாம் பறிக்கும் என்று தொடங்கும் பதிகத்தினை பாடினார்.
https://www.youtube.com/watch?v=7xesNMOZbZs   Add audio link Add Audio
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.


1


மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்
காக்கி னானணி யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை யால்அரு நோய்களே.


2


குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை
அண்ட ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.


3


முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் னுள்ளமே.


4


ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும்
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை
அள்ள லம்புன லாறை வடதளி
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.


5


Go to top
நீதி யைக்கெட நின்றம ணேயுணும்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.


6


திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.


7


ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே.


8


வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன லாறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே.


9


செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழையாறை வடதளி
5.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 5.058