![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=DhIte7qQ1tE Add audio link
7.019
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருநின்றியூர் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி
அற்றவ னாரடி யார்தமக்
காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபரர் என்று
பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.
1
வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்
ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர் போற்றும்எம்
புண்ணியத்தார்
நேசத்தி னால்என்னை ஆளுங்கொண்
டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.
2
அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த
இடம்வளம் மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
யுந்திரு நின்றியூரே.
3
ஆறுகந் தார்அங்கம் நான்மறை
யார்எங்கு மாகிஅடல்
ஏறுகந் தார்இசை ஏழுகந் தார்முடிக்
கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்
தார்பரி சாந்தமதா
நீறுகந் தார்உறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.
4
வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
னார்அதி கைப்பதியே
தஞ்சங்கொண்டார்தமக் கென்றும்
இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.
5
Go to top
ஆர்த்தவர் ஆடர வம்மரை
மேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல்
வெம்புலால் கையகலப்
பார்த்தவர் இன்னுயிர் பார்படைத் தான்சிரம்
அஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.
6
தலையிடை யார்பலி சென்றகந் தோறுந்
திரிந்தசெல்வர்
மலையுடை யாள்ஒரு பாகம்வைத்
தார்கற் றுதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ்
சுழல அருநடஞ்செய்
நிலையுடை யார்உறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.
7
எட்டுகந் தார்திசை யேழுகந்
தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும்
இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்
காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.
8
காலமும் ஞாயிறு மாகிநின்
றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்
பார்அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்
மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிட
மாந்திரு நின்றியூரே.
9
வாயார் மனத்தால் நினைக்கு
மவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி ஆடிய மேனியர்
வானில்என்றும்
மேயார் விடையுகந் தேறிய
வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர்
ஊர்திரு நின்றியூரே.
10
Go to top
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
யறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாய்இருந்
தானைத் திருநாவல்ஆ
ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல்
லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநின்றியூர்
1.018
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
Tune - நட்டபாடை
(திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
5.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடுங் கண் வெண்தலை கொண்டு,
Tune - திருக்குறுந்தொகை
(திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.019
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
Tune - நட்டராகம்
(திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.065
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருவும், வண்மையும், திண் திறல்
Tune - தக்கேசி
(திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000