சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.030   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

கருப்பறியலூர் (தலைஞாயிறு) - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு கோல்வளைநாயகியம்மை உடனுறை அருள்மிகு குற்றம்பொறுத்தவீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=NBtJgCJKwnI   Add audio link Add Audio
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்
கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக்
கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங்
கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


1


நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே
நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்
கருப்ப றியலூர்க்
கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


2


முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து
மூன்று போதும்
கட்டார்ந்த இண்டைகொண் டடிசேர்த்தும் அந்தணர்தங்
கருப்ப றியலூர்க்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக்
கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


3


விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங்
கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


4


பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக்
கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங்
கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங்
கொகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


5


Go to top
பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப்
பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங்
கருப்ப றியலூர்க்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங்
கொகுடிக் கோயில்
ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


6


செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச்
சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங்
கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


7


பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும்
பாடி யாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்டோளன் முக்கண்ணன்
கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத
கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


8


சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந்
தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைக ளுடையானை விடையானைக்
கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்குங்
கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


9


பண்டாழின் னிசைமுரலப் பன்னாளும் பாவித்துப்
பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக்
கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங்
கொகுடிக் கோயில்
எண்டோளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.


10


Go to top
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங்
கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய்
தின்ப மெய்தி
மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த
வண்ட மிழ்களே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கருப்பறியலூர் (தலைஞாயிறு)
2.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
Tune - இந்தளம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)
7.030   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து
Tune - நட்டராகம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.030