நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார் துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள் முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே.
|
1
|
ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய் மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.
|
2
|
தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர் பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர் மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.
|
3
|
இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென் விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர் அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர் முளைப்பிறைச் சென்னிச் சடைமு டிமுது குன்றரே.
|
4
|
ஆடி யசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.
|
5
|
Go to top |
இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக் குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள் முழைவள ராளி முழக்க றாமுது குன்றரே.
|
6
|
சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச் சேடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள் முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.
|
7
|
அந்தி திரிந்தடி யாரும்நீரும் அகந்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம் முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.
|
8
|
செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய அட்டுமின் சில்பலிக் கென்ற கங்கடை நிற்பதே பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ முட்டி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.
|
9
|
எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிறர் என்சொலார் பத்தியி னால்இடு வாரி டைப்பலி கொள்மினோ எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல் முத்திமுத் தாறு வலஞ்செய் யும்முது குன்றரே.
|
10
|
Go to top |
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப் பித்தனொப் பான்அடித் தொண்ட னூரன் பிதற்றிவை தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார் எத்தவத் தோர்களும் ஏத்து வார்க்கிட ரில்லையே.
|
11
|
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|