ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய்முகில் பொழியும் வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின் தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல் நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே
|
1
|
தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ் சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத் திண்டேர்மிசை நின்றான்அவன் உறையுந்திருச் சுழியல் தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே
|
2
|
கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக் கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல் தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவார்அடி தொழுவார் அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள் பிரியாளே
|
3
|
மலையான்மகள் மடமாதிட மாகத்தவண் மற்றுக் கொலையானையின் உரிபோர்த்தஎம் பெருமான்திருச் சுழியல் அலையார்சடை யுடையான்அடி தொழுவார்பழு துள்ளம் நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே
|
4
|
உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்தும் செற்றார்திரு மேனிப்பெரு மான்ஊர்திருச் சுழியல் பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமம் கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே
|
5
|
Go to top |
மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச் சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல் நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்தும் தலந்தாங்கிய புகழான்மிகு தவமாம்சது ராமே
|
6
|
சைவத்தசெவ் வுருவன்திரு நீற்றன்னுரு மேற்றன் கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான் தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்திருச் சுழியல் மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே
|
7
|
பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியும் கோவேந்திய வினயத்தொடு குறுகப்புக லறியார் சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல் மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே
|
8
|
கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்வி செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக் குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கியர் அறியா மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே
|
9
|
நீருர்தரு நிமலன்திரு மலையார்க்கயல் அருகே தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்திருச் சுழியல் பேரூரென வுறைவானடிப் பெயர்நாவலர் கோமான் ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துய ரிலரே
|
10
|
Go to top |