குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும் நின்குலத் திற்கும்வந்தோர் நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின் இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும் உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே.
|
1
|
>வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் ணித்தில வாள்நகைக்குத் தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற் படுத்தநன் நீள்கழ லீசர்சிற் றம்பலந் தாம்பணியார்க் கடுத்தன தாம்வரிற் பொல்லா திரவின்நின் னாரருளே.
|
2
|
>குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து மின்றங் கிடைநும் மையும்வந்து மேவுவன் அம்பலஞ்சேர் மன்றங் கிடைமரு தேகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னைச் சென்றங் கிடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே.
|
3
|
>கேழே வரையுமில் லோன்புலி யூர்ப்பயில் கிள்ளையன்ன யாழேர் மொழியா ளிரவரி னும்பகற் சேறியென்று வாழே னெனவிருக் கும்வரிக் கண்ணியை நீ வருட்டித் தாழே னெனவிடைக் கட்சொல்லி யேகு தனிவள்ளலே.
|
4
|
>வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன் குருட்டிற் புகச்செற்ற கோன்புலி யூர்குறு கார்மனம்போன் றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங னேசொல்லி யேகுவனே.
|
5
|
Go to top |
>நல்லாய் நமக்குற்ற தென்னென் றுரைக்கேன் நமர்தொடுத்த வெல்லா நிதியு முடன்விடுப் பான்இமை யோரிறைஞ்சும் மல்லார் கழலழல் வண்ணர்வண் தில்லை தொழார்களல்லாற் செல்லா அழற்கட மின்றுசென் றார்நம் சிறந்தவரே.
|
6
|
>அருந்தும் விடமணி யாம்மணி கண்டன்மற் றண்டர்க்கெல்லாம் மருந்து மமிர்தமு மாகுமுன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல் திருந்துங் கடன்நெறி செல்லுமிவ் வாறு சிதைக்குமென்றால் வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாமினி வாழ்வகையே.
|
7
|
>ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழுஞ் சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார் தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென் கொலாமின்று செய்கின்றதே.
|
8
|
>கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும் வானமர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர்போல் தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே.
|
9
|
>மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான் கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால் நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல் இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த வாறென்ப ரேந்திழையே.
|
10
|
Go to top |
>வந்தாய் பவரையில் லாமயில் முட்டை இளையமந்தி பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண் போஇனிதே கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போற் சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையுந் திருவினர்க்கே.
|
11
|
>மொய்யென் பதேஇழை கொண்டவ னென்னைத்தன் மொய்கழற்காட் செய்யென் பதேசெய் தவன்தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும் பொய்யென்ப தேகருத் தாயிற் புரிகுழற் பொற்றொடியாய் மெய்யென்ப தேதுமற் றில்லைகொ லாமிவ் வியலிடத்தே.
|
12
|
>மன்செய்த முன்னாள் மொழிவழியே அன்ன வாய்மைகண்டும் என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாவென தின்னுயிரும் பொன்செய்த மேனியன் றில்லை யுறாரிற் பொறையரிதாம் முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே.
|
13
|
>கருந்தினை யோம்பக் கடவுட் பராவி நமர்கலிப்பச் சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற் பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றிற்றுன்றி விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே.
|
14
|
>வென்றவர் முப்புரஞ் சிற்றம் பலத்துள்நின் றாடும்வெள்ளிக் குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையுஞ் செல்லல்செப்பா நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே.
|
15
|
Go to top |
>வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர் ஒருவன தன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத் தருவன செய்தென தாவிகொண் டேகியென் நெஞ்சிற்றம்மை இருவின காதல ரேதுசெய் வானின் றிருக்கின்றதே.
|
16
|
>வேயின மென்தோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப் பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி ஆயின ஈசன் அமரர்க் கமரன்சிற் றம்பலத்தான் சேயின தாட்சியிற் பட்டன ளாம்இத் திருந்திழையே.
|
17
|
>சுணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர் நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல் அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமின் அன்னையரே.
|
18
|
>மாட்டியன் றேயெம் வயிற்பெரு நாணினி மாக்குடிமா சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவ ளுள்ளமெல்லாங் காட்டியன் றேநின்ற தில்லைத்தொல் லோனைக்கல் லாதவர்போல் வாட்டியன் றேர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே.
|
19
|
>குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான் இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும் மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே.
|
20
|
Go to top |
>வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற மேலன் புகுந்தென்கண் நின்றா னிருந்தவெண் காடனைய பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே.
|
21
|
>அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்பயலார் பெயர்ந்தும் ஒழியா விடினென்னை பேசுவ பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்தும் உணரான தம்பலம் உன்னலரின் துயர்ந்தும் பிறிதி னொழியினென் ஆதுந் துறைவனுக்கே.
|
22
|
>சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால் நன்றா வழகிதன் றேயிறை தில்லை தொழாரின்நைந்தும் ஒன்றா மிவட்கு மொழிதல்கில் லேன்மொழி யாதுமுய்யேன் குன்றார் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே.
|
23
|
>யாயுந் தெறுக அயலவ ரேசுக ஊர்நகுக நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவ லென்னுடைய வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல் தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே.
|
24
|
>வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர் உண்டலுற் றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க் கொண்டலுற் றேறுங் கடல்வர எம்முயிர் கொண்டுதந்து கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென் றானொர் கழலவனே.
|
25
|
Go to top |
>குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தனதாள் முடிக்கல ராக்குமொய் பூந்துறை வற்கு முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும் படிக்கல ராமிவை யென்நாம் மறைக்கும் பரிசுகளே.
|
26
|
>விதியுடை யாருண்க வேரி விலக்கலம் அம்பலத்துப் பதியுடை யான்பரங் குன்றினிற் பாய்புனல் யாமொழுகக் கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின் மதியுடை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே.
|
27
|
>மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள் எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச் சினக்களி யானை கடிந்தா ரொருவர்செவ் வாய்ப்பசிய புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே.
|
28
|
>இளையா ளிவளையென் சொல்லிப் பரவுது மீரெயிறு முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர் வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன் திளையா வருமரு விக்கயி லைப்பயில் செல்வியையே.
|
29
|
>கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப் புள்ளின மார்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கடம் வள்ளின மார்ப்ப மதுகர மார்ப்ப வலம்புரியின் வெள்ளின மார்ப்ப வரும்பெருந் தேரின்று மெல்லியலே.
|
30
|
Go to top |
>பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மாலயற்குங் காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் தில்லையன்ன வாரண வும்முலை மன்றலென் றேங்கும் மணமுரசே.
|
31
|
>அடற்களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் துன்பவின்பம் படக்களி யாவண் டறைபொழிற் றில்லைப் பரமன்வெற்பிற் கடக்களி யானை கடிந்தவர்க் கோவன்றி நின்றவர்க்கோ விடக்களி யாம்நம் விழுநக ரார்க்கும் வியன்முரசே.
|
32
|
>என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித் தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே.
|
33
|
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|