பெரியவா கருணை இளநிலா வெறிக்கும் பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் கரியவா தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா சாட்டியக் குடியார் இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
|
1
|
பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம் பட்டவர்த் தனம்எரு தன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெருந் தேவி சாந்தமும் திருநீ றருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார் ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
|
2
|
தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம் தொடர்வன மறைகள்நான் கெனினும் கழுதுறு கரிகா டுறைவிடம் போர்வை கவந்திகை கரியுரி திரிந்தூண் தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு சபவடம் சாட்டியக் குடியார் இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
|
3
|
பதிகம்நான் மறைதும் புருவும்நா ரதரும் பரிவொடு பாடுகாந் தர்ப்பர் கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில் கடியிருள் திருநடம் புரியும் சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக் குடியார் இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
|
4
|
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலையுடை யரையர்தம் பாவை தருமனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக் குடியார் இருமுகம் கழல்மூன் றேழுகைத் தலம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
|
5
|
Go to top |
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத் தளிக்கும் கனகமே வெள்ளிக் குன்றமே என்றன் களைகணே களைகண்மற் றில்லாத் தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும் சைவனே சாட்டியக் குடியார்க் கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா றியம்பே.
|
6
|
செம்பொனே பவளக் குன்றமே நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத் தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே அத்தனே பித்தனே னுடைய சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக் குடியார்க் கின்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா றியம்பே.
|
7
|
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள்வீற் றிருந்த அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர் சாட்டியக் குடியிருந் தருளும் எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை யிறைவனே போற்றியே போற்றி
|
8
|
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள்வீற் றிருந்த அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர்கெடுத் தெனக்கே.
|
9
|
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக் குடியார் ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை இருந்தவன் திருவடி மலர்மேற் காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன் கழறுசொன் மாலைஈ ரைந்தும் மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே வளரொளி விளங்குவா னுலகே.
|
10
|
Go to top |