சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=90vnAlHSZqM
1.014
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) - நட்டபாடை அருள்தரு அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி உடனுறை அருள்மிகு கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் திருவடிகள் போற்றி
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.
[ 1]
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,
குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம்
அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.
[ 2]
மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி,
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.
[ 3]
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,
குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.
[ 4]
மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும்
கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.
[ 5]
Go to top
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,
கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.
[ 6]
மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை
நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.
[ 7]
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து,
குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.
[ 8]
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை
குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம்
மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.
[ 9]
மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக்
குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம்
புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற,
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.
[ 10]
Go to top
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்
கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி,
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்,
ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
1.014
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானில் பொலிவு எய்தும் மழை
Tune - நட்டபாடை
(திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400