| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=mvMHyNjAJWg Add audio link
5.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமாற்பேறு - திருக்குறுந்தொகை அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
1
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய், வினை போய் அற!
கச்ச மா விடம் உண்ட கண்டா! என,
வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.
2
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.
3
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்!
அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்;
பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர்
மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.
4
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்!
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்,
கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர்
மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.
5
Go to top
ஈட்டும் மா நிதி சால இழக்கினும்,
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,
காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில்,
வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.
6
ஐயனே! அரனே! என்று அரற்றினால்,
உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்;
செய்ய பாதம் இரண்டும் நினையவே,
வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.
7
உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என,
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.
8
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருமாற்பேறு
1.055
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
Tune - பழந்தக்கராகம்
(திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
1.114
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குருந்து அவன், குருகு அவன்,
Tune - வியாழக்குறிஞ்சி
(திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
4.108
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை
Tune - திருவிருத்தம்
(திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
5.059
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் ஆற்றின் படை வேண்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
5.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஏதும் ஒன்றும் அறிவு இலர்
Tune - திருக்குறுந்தொகை
(திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
6.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாரானை; பாரினது பயன் ஆனானை;
Tune - திருத்தாண்டகம்
(திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)